புது எண்ணம் புது வாழ்வு
சிறுவயதில் ரேடியோவில் அடிக்கடி ஒரு பாடல் கேட்டிருக்கிறேன் 'ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே' என்று போகும். இந்தப்பாடலின் உண்மையான அர்த்தம் வயது ஆக ஆகத்தான் தெளிவாக புரிகிறது. இயல்பிலேயே மனித மனம் ஆசைக்கு அடிமை, நம் மனதில் வரும் ஆசைகளுக்கு அளவும் இல்லை... இயற்கையே நம்மை அப்படிப் படைத்து விட்டதோ என்று தோன்றும் சில நேரங்களில்...... அதே இயற்கை தான் இதை உணரும் அறிவையும் கொடுத்திருக்கிறது. என் வீட்டில் பல நேரங்களில் நான் மேலும்மேலும் ஆசைப்பட்டு வாங்கிய பொருட்களில் பெரிதாக எனக்கு திருப்தி எதுவும் கிடைத்ததில்லை... பொருட்கள் வீட்டை அடைந்தது தான் மிச்சம். கூடவே நேரம் பணம் மற்றும் என் எனர்ஜி செலவானது வீண் தான். இதில் சோகம் என்னவென்றால், இதை நான் உணரவே எனக்குப் பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் சிலரை நான் கவனித்திருக்கிறேன் இருக்கும் பொருளை நன்றாக உபயோகித்து அதை வைத்து அழகாக வாழ்க்கை நடத்துவார்கள்.. இவர்களின் வாழ்க்கை பிறருடன் போட்டி போட்டு அதிகமாக பொருட்களை வாங்குவோரின் வாழ்க்கையை விட மிகவும் திருப்திகரமாக இருப்பதை நான் கவனித்திருக்கிறேன். இந்த மாதிரி மனிதர்களிடம் எப்ப...