புலியும் முறமும்
புலியும் முறமும் வீரத் தமிழ்நாட்டில் சங்கத்தமிழ் காலத்தில், முறத்தால் புலியை அடித்து விரட்டினாள் தனியாய்ப் பெண்ணொருவள்! தீரப்பெண்ணவள் விரட்டிய புலியது வந்ததேன் நம் வீட்டுக்குள்? தானே தான் வந்ததா? புலியின் காட்டில் புல்லை வெட்டி மானை விரட்டி, மனிதன் கட்டிய வீட்டில், தன் இருப்பிடம் தேடி வந்ததா? கொஞ்சம் கொஞ்சம் முன்னேறி காட்டின் ஓரம் சென்றோம், இன்னும் கொஞ்சம் முன்னேறி காட்டினுள்ளே செல்கின்றோம், இப்படியிந்த முன்னேற்றத்தால் காடே இல்லையாம் பின்னாளில்... புலியும் யானையும் போவதெங்கே காடுகள் இல்லா போனாலே? விலங்கின் காட்டின் உள்ளே, வீட்டைக் கட்டி நாம் போவோம், தம் இல்லம் தேடி அவை வந்தால், முறமிருக்கு அடிக்கவே மின்சாரம் இருக்கு கொல்லவே! அறிவுகள் ஆறு உள்ளன நியாய தர்மம் இல்லையே? மண்ணில் மனிதன் முக்கியம் மனிதன் மட்டுமே முக்கியம், என்ற எண்ணம் மாறி எல்லா உயிரும் தேவையென்ற நிலைப்பாடென்று வருதோ அன்றே பூமி மீண்டும் மலரும்! 👇🏼 Man animal conflict என்ற தலைப்பில் அடிக்கடி செய்தித்தாள்களில் கட்டுரைகள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் நான் ...