தன்னிறைவு

இயற்கையான ஈடுபாடு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விஷயத்தில் இருக்கும்.
சில நாட்கள் முன்பு வரை எனக்கு என்றுமே அந்த ஈடுபாடு என்னுடைய கல்வி சம்பந்தமாகத் தான் இருந்தது.
பள்ளியில் படிக்கும் பொழுது எப்படியாவது மருத்துவராக விட வேண்டும் என்ற அவா மிகுந்திருந்தது.
சரியாக நாங்கள் பியூசி முடிக்கும் பொழுது அந்த  வருடம்,நாங்கள் பியூஸியில் வாங்கிய மார்க்கை வைத்தே எம்பிபிஎஸ் சீட் களெல்லாம் கொடுக்கப்பட்டன.
நான் எம்பிபிஎஸை என் மனதில் வைத்தே நல்ல மார்க் வாங்கி இருந்தேன் எனக்கு மிக சுலபமாக அட்மிஷன் கிடைத்தது.
ஆனால் எனக்கு 'அபஸெஸ்ஸிவ் நியூரோஸிஸ்'எனப்படும் ஒருவிதமான மனப்பிரச்சனையினால் முதல் வருடத்திற்குப் பிறகு படிப்பு ஒரு வருடம் தாமதமாகியது. இருந்தும் அடுத்த வருடம் மீண்டும் சேர்ந்து படித்து முடித்துவிட்டேன்.

முடித்தவுடன் திருமணம் குழந்தைகள்......
பிறகு மதுரையில் பிஎச்டி சேர்ந்தார் என் கணவர்.
நானும் ஒரு பெரிய கண் மருத்துவமனை மற்றும் நிறுவனத்தில் சேர்ந்து கண் மருத்துவத்தில் டிப்ளமா வாங்கினேன்....

அதற்கும் மேலே டிஎன்பி என்ற மேற்படிப்பு இருந்தது.
எனக்கு எப்படியாவது அந்த டிகிரி வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்து கொண்டே இருந்தது.
மூன்று முறை எழுதி மூன்றாவது முறைதான் தியரி பரீச்சை தேர்ந்தேன்.
பிறகு clinicals என்னும் பிராக்டிகல் பரிச்சைக்கு மூன்று முறை வாய்ப்பு தருவார்கள்.
அதிலும் மூன்றாவது முறை தான் தேர்வானேன்.

தியரி மற்றும் பிரக்டிகல்ஸ் இரண்டின் போதும் போதிய அறிவு பத்தாமல்  நான் பெயில் ஆகவில்லை.....  எழுதும் பொழுது அதை எப்படி எழுதுவது என்று தெரியாமல் பக்கம் பக்கமாக எழுதினேன்....
எனக்கே புரியாத என் எழுத்தை பக்கம் பக்கமாகக் கண்டிப்பாக யாராலும் படித்திருக்க முடியாது.
மூன்றாவது முறை  எழுதும் பொழுது என்னுடன் பணிபுரிந்த ஒரு தோழி கூறிய அறிவுரையின் படி சுருக்கமாக என் விடைகளை எழுதி எழுத்தை விட வரைபடங்கள் அதிகம் கலர் பென்சில் உபயோகித்து வரைந்தேன்- திருத்துவோர் என்னுடைய பேப்பரைப் பார்த்தவுடன் புரியும் அளவிற்கு.... அந்த முறை பாஸ் ஆகி விட்டேன்.

பிறகு பிராக்டிகல் பரீட்சையின் போது மிகவும் டென்ஷனான மனநிலையின் காரணமாக, எனக்குத் தெரிந்த வினாக்களுக்கு கூட விடை சொல்லாமல் விட்டுவிட்டேன்.
இதனால் ஓரளவு சுலபமாக தேறி இருக்க வேண்டிய டிஎன்பி பரீட்சை, எனக்கு ஒரு லட்சியம் போல மாறிவிட்டது.

இதிலும் மூன்றாவது முறை என்னுடைய ஆசிரியரின் அறிவுரையின்படி மிகவும் அமைதியான ஒரு மனநிலையை வளர்த்துக் கொண்டு பிராக்டிகல் பரிட்சைக்குப் போனேன், எந்தக் கேள்விக்கும் டென்ஷன் ஆகாமல் எனக்குத் தெரிந்ததைக் கூறினேன் தைரியமாக.... பாஸாகிவிட்டேன்!

அந்த ரிசல்ட் வந்த போது நான் அடைந்த மனத்திருப்திக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.... பல வருடங்களுக்கு எனக்கு அந்தத் திருப்தி இருந்து கொண்டிருந்தது.

எப்படியோ என் தீராத அவா, மூன்றாம் முறை நிறைவேறி  DNB பாஸ் செய்து முடிக்கும் முன், நான் படித்துக்கொண்டு இருந்த நிறுவனத்தில் இருந்து நான் வெளியேறி விட்டேன்... அதன்பிறகுதான் கிளினிக்கல் பாஸ் செய்தேன்.

இப்பொழுதெல்லாம் அதுபோல ஒரு லட்சியமோ ஆசையோ எதுவுமில்லை ,ஏதோ நான் போவதற்குள் செய்து முடிக்க வேண்டிய சில கடமைகளை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்ற ஒரு மனநிலை வந்திருக்கிறது.
வயது  ஆகஆக மனிதர்களின் மனம் மாறிக்கொண்டே இருக்கும் போலிருக்கிறது.


👇

  தன்னிறைவு

மனதின் அடியில்
என்றும் உறங்கும்
ஏதோ ஒன்று,
ஆசை எனலாம்
லட்சியம் எனலாம்..

உனக்குப் பணம்
எனக்குக் கல்வி
அவருக்கேதோ
வேறொன்றிருக்கும்..

மறத்தல் வேண்டா
மறுத்தல் வேண்டா
எதுவாய் இருப்பினும்
மறத்தல் வேண்டா!

அன்றாட வாழ்வின் கவனச் சிதறல், ஆயிரம் இருந்தும் ஆகாது மறத்தல்.

அவ்வப்பொழுது அதையே நோக்கி
எடுக்க வேண்டும் ஒன்றிரண்டடிகள்,
என்றோ ஒருநாள் எதிர்பாராமலே
நிறை வேறும் அந்த லட்சிய ஆசை!

தன்னிறைவென்பது அங்கே வரலாம்
வாழ்வின் பூரணம் அங்கே பெறலாம்!

Comments

  1. Why does one get the feeling that you you do dot have that contentment now? Are you attributing that to not having any dream or objective, perhaps due to old age?

    ReplyDelete
    Replies
    1. பதிவிலேயே பதில் உள்ளது வயதாக ஆக மனம் மாறும் லட்சியம் ஆசைகள் தேவையில்லை வாழ்க்கையில் என்ற உணர்வு வரும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

A minute to ponder 🤔🤔 Two to cook 🍋🌶️

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

விருட்சம்

சிந்திக்க ஒரு நிமிடம்

புகைபோக்கி

நகரும் 🐌 நத்தை

Cruelty-free Ommelete அகிம்சா ஆம்லட் 🌰🥬🌶️

வெட்டும் நேரம் வளரும் நேரம்

A minute to ponder...🤔 Two to cook.. 🍆🍅

பொன்னாடை துணி