Posts

Showing posts from May, 2020

ஒவ்வொன்றும் ஒரு விதம்

வாரிசென்று வந்தது வருடம் ஒன்று வரிசையாக,  நல்லவேளை நின்றது நான்காவது வந்ததுமே. வேளா வேளை தவறாமல் வாய்க்குணவு கிடைத்துவிடும் பெரிதாய்த் தாங்கல் ஏதுமின்றி வளர்ந்துவிட்ட பிள்ளையெலாம் பள்ளி சென்றன உள்ளூரிலே! படிப்பில் ஒன்று படுசுட்டி! பரவாயில்லை இரண்டாவது! மற்ற இரண்டும் எப்படி என்றால்- எழுத்தென்றால் புரியாது, எண்ணென்றால் விளங்காது! ஆனால் நான்கும் சென்றன அன்றாடம் அந்தப் பள்ளிக்கு! படிக்கும் குழந்தை படித்து விடும், ஆடும் குழந்தை ஆட்டமாடும் ஒன்றிரண்டு ஊரைச்சுற்றும் வீட்டுப் பொறுப்பு கை வந்தால் அதிலே நல்ல பேரெடுக்கும். படிப்பேனில்லை பாட்டேனில்லை,  கேள்வி கேட்க ஆளில்லை, குறிக்கோளும் வைப்பதில்லை லட்சியமும் தேவையில்லை, வருகின்ற வாழ்வதனை வந்தவண்ணம் ஏற்கலாம். வளர்ந்துவிட்ட பிள்ளைகளின் வருமானத்தை நோக்கினால், ஒன்றுக்கொன்று வேறுதான்....  குறைவாய் ஈட்டும் குழந்தைக்கு  கூடக் கொடுப்பார் பெற்றோரவர்.... எளிமையான கோட்பாடு! ஏன் இல்லை  என்ற கேள்வி என்றும் இஙகே வந்ததில்லை! இருப்போருக்கு இருக்கட்டும், இல்லாருக்கு நாம் கொடுப்போம்,  இதுவேதான் வாழ்க்கையிங்கு சில காலம் முன்னாலே.... 👩‍🎓⛹️🤾🚴🏌️🤼🧗🚵👩‍💻  விளையா

வெல்வெட் பூச்சி

வெல்வெட் பூச்சி 🐞🐛 சின்னஞ்சிறு வயது தாண்டி  சிறுமியாக இருந்த காலம், சுற்றிப் படர்ந்த நிலத்திலே மரங்களடர்ந்த பரப்பிலே, பல்லுயிரெங்கும் பெருகி செழித்திருந்த காலத்திலே... மேலிருந்து கீழே வந்து விழுந்து தெறித்த மழையிலே, கீழிருந்து மேல் வந்து நெளிந்து நகரும் புழுக்கள்,  எண்ணிலடங்கா கால்களுடன் எங்கெங்கும் ரயில் பூச்சி, செக்கச் சிவந்த நிறத்தில் நிலமெங்கும்  வெல்வெட் பூச்சி.... உலாப் போக எழுந்து வந்து ஊர்ந்து போன பூச்சிகளை, தீப்பெட்டியில் போட்டெடுத்துப் பிடித்தடைக்கும் விளையாட்டு... பின்னோக்கிப் பார்க்கிறேன் பிழையென்று உணர்கிறேன்! தீப்பெட்டி திறந்தவுடன் சின்னஞ்சிறு காலெடுத்துத் தப்பித்தோட எத்தனித்த செக்கச்சிவந்த பூச்சியே, என்றும் நீ என்னையே மன்னிக்க மாட்டாயே... வாயில்லா ஜீவனதை வதைக்காதே என்று,  யாரேனும் கூறி இருந்தால் கண்டிப்பாய் சிந்தித்து  மாறியிருப்பேன் மனதளவில்! 🐝🦟🦗🐜🐛🦋🐞🦂🕷️🕸️🐌 சிறுவர் விளையாட்டு என்னுடைய குழந்தை மற்றும் சிறுவயது பருவத்தில், காலப்பருவங்களுக்கு ஏற்ப விளையாட்டுக்கள் மாறும். எப்போதும் இருக்கும் ஸ்கிப்பிங்குடன்,  காற்று காலத்தில் பட்டம் விடுதல், வெயில் கால விடுமுறைய

பழுது பார்த்தல்

பழுது பார்த்தல்🔨🔧 காரின் கதவு நசுங்கிப் போனால்  'டிங்கர்' என்று செய்வார்கள், அன்றைய காலத்தில்! இன்னொரு கதவை வாங்கி மாட்டு இருக்கவே இருக்கு காப்பீடு இன்றைய காலத்தில்! ஆடை கொஞ்சம் கிழிந்து விட்டால் தைத்து அணிந்தோம் அன்றைய நாளில்,    இன்று கொஞ்சம் கிழிந்தாலும் எறிந்துவிடு பழந்துணியை புதியதாக வாங்கலாம்! செருப்பின் கதையும் இதுவேதான் கொஞ்சம் பிய்ந்தால் புதிதேதான்! மாவரைத்துத்  துணிதுவைத்து, மிளகரைத்து சாறெடுத்து துணையிருக்கும் இயந்திரம், பழுதானால் பண்ட மாற்றம்! பழுது பார்த்து வேலை செய்தால்  பழையது ஓடும் பல நாட்கள்! பழுதுபார்க்கும் கலையை நீங்கி,  புதிய பொருளை மீண்டும் வாங்கி, வளமை சுருங்கி பூமியது பாலை போல ஆகிவிடும் பேரன் பேத்தி வரும்போது! 🧵🧶✂️📌🧷🥾👢👞🥿🔨🔧 நாங்கள்  ஒரு பதினைந்து வருடம் முன்பு முதன் முதலில் வாங்கிய கார் மாருதி 800. நீல நிறத்தில் பார்வைக்கு கொஞ்சம் ஸ்மார்ட்டாக இருக்கும் வண்டி அது. திருமணமான பின் பல வருடங்கள் நான் எவ்வளவு கேட்டும் கார் வாங்காமல் டபாய்த்த என் வீட்டுக்காரர் எங்கள் வீட்டுக்கு பாப்பாத்தி  நாய்க்குட்டி வந்ததும் ஓரிரு மாதங்களில் வாங்கிவிட்டார். ஏனென்றா

சுசீலா

https://youtu.be/0xoZ1wctHug குளிர்ச்சியான குரலிலே இனிமை சேர்ந்து சொட்டுதே காதில் வந்து பாயுதே தேன் கலந்த பாடலே! தெலுங்கு பேசும் வாயிலே தெள்ளத் தெளிவு தமிழுமே கணீரென்ற குரலிலே கனிவும் கூட சேருதே! சோகத்திலே அமிழ்ந்திருக்க சுகமாகத் தூக்கிவிடும், களிப்பு வந்து கூத்தாட சமநிலைக்குக் கொண்டுவரும்.. சுற்றிலுள்ள தொல்லையெல்லாம் சற்று தூரம் சென்று விடும், சுசீலாவின் குரலமுதம்  சுமந்து வரும் பாட்டாலே! கண்ணதாசன் வரிகளை விஸ்வநாதன் ராகத்திலே இந்தக் குயில் பாடினால் இன்னலான நேரத்திலும் வீண்கவலை குறையுமே! 📻 🎼🎵🎶🎧📻📷🎼🎶🎵 தேனினும் இனிய.... நான் சிறுவயதில் ரேடியோவில் பாடல் கேட்க ஆரம்பித்தது முதல் இன்று என்னுடைய ஸ்மார்ட்போனில் கேட்கும் பாடல்கள் வரை சுசீலாவின் குரலுடனே தான் வளர்ந்து,வயதாகியிருக்கிறேன். அநேகமாக என் வயதையொத்த அனைவருக்கும் இந்த அனுபவம் தான் இருக்கும்.... அந்தக்காலத்தில் UMS என்ற ஒரு பெரிய ரேடியோ எங்கள் வீட்டில் இருந்தது, கிட்டத்தட்ட அது ஒரு இரண்டு அடி நீளமும் ஒன்றரை அடி உயரம் ஒரு அடி அகலமும் இருக்கும். இரண்டு பெரிய குமிழ்கள்..... அதில் ஒன்றைத் திருப்பினால் ஒலி அதிதமாகும்,  இன்னொன்றை திரு

டையப்பர் 👶

சாயம் போன ஆத்தா சேலை தாத்தாவோட பழைய வேட்டி, துவைத்துத்  துண்டாய்க் கிழித்து வைத்தால், சின்னச்சின்னப் பயனுண்டு! சிறு மழலை வீட்டினிலே!   சின்னஞ்சிறிய குழந்தைக்கு  படுத்துக்கொள்ள போர்த்திக்கொள்ள, மேலும் கீழும் அணிந்துகொள்ள, துவைத்தால் சுளுவில் காய்ந்துவிட,  நைந்தால் தூக்கிப் போட்டுவிட, காசில்லாமல் கிடைத்திடுமே குழந்தைத் துணிமணிகளிங்கே! கிழிபடாத புடவையிலே தொட்டிலொன்றும் கிடைத்திடும்..! இந்தக் காலக் குழந்தை, அணிவது வேட்டி சேலையல்ல.... மரத்தை வெட்டித் தயாரிக்கும்  டயாப்பர் என்னும் கோமனம்! டயப்பர் அணிந்த தோலும் ஒவ்வாமையில் சிவந்து வீங்க வலியில் குழந்தை அழுது சிவக்க, புண்ணில் நாமும் மருந்தைப் பூச, '👶 இன்றுதானே பிறந்தேன்? பிறந்துமே புண்ணா? இடர்களேதான் வாழ்க்கையா?' இன்றைய உலகின் அழிவுப்பொருளே, கழிவுப்பொருளாம் பெரும் பூதம், வளரவிடாமல் தடுக்க வேண்டும், கண்ணே இன்று நீயும் நானும்! கழிவுப் பொருளில் பெரும்பங்கு, வகிப்பதென்பது டயப்பர் இங்கு! நான்கு பருத்திப் புடவை மற்றும் வெள்ளை வேட்டியில், நினைக்க இயலா நன்மை எல்லாம்  நம்மிடமே வந்துசேரும்... புதிய கோட்பாடேதுமில்லை  பழங்காலத்தில் பார்த்ததுதான்.

ஆமைப் பெண்🐢

ஆமைப் பெண்🐢 இயற்கை விஞ்ஞான உலகத்திலே சுமார் முப்பது வருடம் முன்னாலே, cane turtle ஆமையைக் காணவில்லை பல காலம்? இருக்கா  இல்லையா சந்தேகம்! ஆமை பற்றிய எல்லாமே அறிந்து வருவேன் நானேயென்று கேரளநாட்டுப்பயணம் சென்று தனியே போனார் இளம் மங்கை விஜயா என்பதவர் பெயராம்! பழங்குடித் தலைவரைத் தேடிப்பிடித்து, அங்குமிங்கும் அலைந்து திரிந்து, காட்டிலுள்ள குகைக்குள்ளே தன்னந்தனியே பலநாள் இருந்து,  கண்டுபிடித்தார் ஆமையை! கொண்டுவந்தார் ஒன்றிரண்டை, சென்னைப் பாம்பு பண்ணைக்கு. அதிலே சிலது  முட்டையிட்டு மெல்லமெல்லக் குஞ்சு பொரிக்க, எழுபது வருடம் யாருமறியா ஆமைக்குட்டி பழக்க வழக்கம் நேரில் கண்டு பதிவுசெய்தார் விஜயா என்ற ஆமைப்பெண்ணவர்! கொண்டு வந்த ஆமை, சைவம் தான் உண்ணும் என்றிருந்த எண்ணம், மாற்றிக்காட்டும் வண்ணம், புழுவும் பூச்சியும் தின்றது,  நான் அசைவம் என்று சொன்னது,    ஆமையன்று விஜியிடம்! இன்னும் பல பாம்புகள் வேறு சில ஆமைகள், போன்றவற்றைப் பண்ணையில், பரிவுடனே தான் வளர்த்து குணங்களை கண்பார்த்து ஏட்டிலே தான் பதித்தார்! எந்தக் காடென்றாலும், விஜியுடன் சென்றால் கவலையில்லை, எல்லாத்திசையும் அவரறிவார்! காட்டின் உள்ளே போனா

தமிழன்டா 🔔⚖️

தமிழன்டா...! 🔔⚖️ பண்டைய செந்தமிழ்நாட்டினிலே,  அறிவுச்சுடராம் புலவர்கள், இலக்கியம் வேண்டும்  நம் நாட்டில்,  என்ற எண்ணம் எழுந்ததுமே , சங்கத்தமிழில் இலக்கியங்கள்  எழுதிக் கொடுத்தார் அக்கணமே! 🙏 அதன்பின்னர் வந்த மன்னராம் ராஜராஜ சோழனாம்,  கோவிலொன்று வேண்டுமென்று  மனதில்     எண்ணம் வந்ததுமே, எப்படி இப்படிச் செய்தார் என்று இன்றும் வியக்கும் வண்ணம்,  கற்கோவில்  கட்டினார் கல்லில்லாதஞ்சையிலே! இன்று வந்த பாரதி  விடுதலையென்று எண்ணினான், எழுந்து வந்த எண்ணத்தை, தீப்பொறி பறக்கப் பாடி தமிழரைத் தட்டி எழுப்பினான்! இவர்களில் யாரும்  என்றுமே,  அன்றைய தமிழ்த் திருநாட்டினிலே, அப்படி இப்படி செய்தார்கள் என்பதைக் கூறித் தூங்கவில்லை.... இன்றைக்கென்ன தேவை என்பதை எண்ணிப் பார்த்தார்கள்... அதையும் உடனே செய்தார்கள்! இன்றைய தமிழ்த்திரு நாட்டினிலே பழைய பெருமை பேச்சினிலே பயன்கள் எதுவும் இல்லையே! வெறும் பேச்சைப் புறக்கணித்து, செயல்வீரர் தோற்றமெடுத்து, அவரவர் மனதின் எண்ணத்தில் எந்தக் காரியம் முக்கியமோ, அந்தக் காரியம் அவர் செய்தால், நாளைய தமிழர் நமையெல்லாம், நினைக்கும் நாளும் வந்திடும் ! ☎️🖱️🖨️⌨️💻🖥️🕟🧷💡📀🍃 நான் பத

கிடைத்தது கை கடிகாரம் 🧐

கிடைத்தது கைகடிகாரம் 🧐 பள்ளிக்கூடம் படித்த காலம் பால்ய நண்பன் கூறிய கதை,  கைக்கடிகாரம் கிடைத்த கதை. ஸ்வெட்ஸர்லாந்து கம்பெனியின் ஃபேவர்லூபா கைக்கடிகாரம், வட்ட வடிவக் கண்ணாடி உள்ளே  எண்களிருந்தன  முத்துப்போலே! அணிந்திருப்பவர் யாரென்றாலும் அணியும் கைக்குத் தனி ஒரு மதிப்பு!  பரீட்சையன்று தொலைந்தது  ஃபேவர்லூபா கடிகாரம், பள்ளி செல்லும் நேரம் வந்தது, கைகடிகாரம் கிடைக்கவில்லை..    வீட்டிலிருந்த அனைவருமே வந்து விட்டார் அறைக்குள்ளே! அங்கே பார்த்தார் இங்கே பார்த்தார் அலமாரியென்றும் மேசையென்றும், இழுப்பறையுள்ளும் புத்தகப் பையிலும், பதறிப் பதறித் தேடினார்கள், அனைவருக்கும் வந்தது பதட்டம் ஆனாலும் அது கிடைக்கவில்லை!   அனைவரும் இறுதியில் வெளியே செல்ல,  அறையை மூடிய நண்பன்,  அமைதியாகத் தலையைக் குனிந்தான், சிந்தனை செய்தான் சில நேரம்,  அறையில் சூழ்ந்த அமைதி  அலாதியான அமைதி...... மெல்லக்கேட்டது 'டிக்...டிக்'  ஓசை  ஓசை நோக்கி நடந்த நண்பன்,  கண்ணில் பட்டது கைக்கடிகாரம் கட்டிலுக்கடியில் இருட்டிய மூலையில்! பிரியத்துடன் கட்டிக் கொண்டான், பள்ளி சென்றான் பரீட்சை எழுத!  🧘🧘🧘        🧐           🧘 🧘🧘 எ

மருந்து மருத்துவம்

மருந்து💊        💉மருத்துவம்         🍔🍅 🍯     🥥🥭🍊🥗💊 🍇🥝 💊  🥣🍛🍲 🍱 🥙 🌮🍕🍛🥣    🥪 💉  💊   💉         🍳 🍒 🍜 பசி வந்த வாய்க்கு  ருசி என்ன தெரியும்? எந்த உணவென்றாலும்  விருந்தாகுமந்த உணவு, செரிமானம் ஆகி நல்ல  சத்தெனச் சேருமந்த உடலிடம். இயற்கையான பசியும் அளவான உணவும் தருமிந்த ஆரோக்கியம் வேறெதிலே வரும்? உணவந்த உடலுக்குத்  தேவையென்ற போதும், அளவுக்கு மீறி   அதையே நாம் உண்டால் அதுவும் ஒரு விஷமாகும் உடம்புக்குள் ஏறி! நோய் வந்த உடம்பை நன்றாக நாம் நோக்கி, நோய்க்கான காரணம் எதுவென்று தெளிந்து, அதற்கான மருந்தை  அளவாக நாம் கொடுத்தால் அருமருந்தாகாதா   நோய் வந்த உடம்புக்கு? நோயில்லா நல் உடம்பில் தேடி நோயைக் கண்டு, அதற்கென்று கூறி  அளவில்லா மருந்துகளைத் தின்னென்று நாம் கொடுத்தால், பசியில்லா வயிற்றிலே பெருவிருந்து கொடுத்தது போல அஜீரணமாகாதா? நோய் தீர்க்கும் மருந்தேதான் அதற்குமொரு அளவுண்டு, மீறினால் விஷமே தான் நன்றாக நாமறிவோம்- அறிந்தபடி நடந்தால் தொழிலுக்கு தர்மமன்றோ? 💉💊💊💉💉💊💊💉💉💊💊 நான் ஆங்கில மருத்துவம் படித்து அதையே கிட்டத்தட்ட முப்பது வருடமாகத் தொழிலாக செய்து வந்தேன். ஒரு வர

தரம் 🍎

Image
   🍎 தரம்  பாடுபட்ட பணத்தால் பொருளொன்று வாங்கி வீடு வந்து சேர்ந்தால், விரைவில்  பழுதாகி மறுபடியும் அதையே வாங்க வந்த  காலம், ஏனிந்தக் கோலம் ? தரமாகக் கொடுத்தால் நீண்ட நாள் தாங்கினால், மீண்டுமதே விற்க முடியாதே நமக்கு என்றதொரு கணக்கோ? தரமான பொருளாக நாமாகக் கொடுத்தால், வாங்கிடும் மனம் வாழ்த்திடும்  நம்மை என்றதொரு கணக்கு  இல்லையோ நமக்கு? தரமுள்ள பொருளுக்கு விலையதிகமென்பதால் வேகமுள்ள விற்பனை நடக்காதிங்கென்று, வியாபாரிகள் நீங்கள் எண்ணிணீரோ மனதில்? செல்லும் காலம் செல்ல பெருகும் வணிகம் பெருக வளரும் லாபம் வளர...... தரமான பொருளிலுண்டு நிலையான லாபமென்றும்! உணர்த்துவது நமக்கதை ஆப்பிளின் கணினிக் கதை! கணினியின் உள்ளே ஒழுங்கென்ன தேவை ? வெளியிலேஅழகிருக்கு வேலையில் தரமிருக்கு, உள்ளழகு எதற்காக? யார்பார்க்கப் போகிறார்கள்? என்றலுத்தார் ஆப்பிளின் தொழிலாளி ! யாருமதை பார்த்தாலும் பார்க்கவில்லை என்றாலும், உள்ளிருக்கும் ஒழுங்கும்  தேவையிங்கு எனக்கு, ஆகையினால் உள்ளேயும் அழகிருக்கவேண்டும், என்றார் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிளின் முதலாளி! வாங்குவோர் களிப்படைந்தால் விற்போர் செழிப்படைவார் !  வளத்துடன் அறம் சேர்ந்து வளர்த்த

குப்பை

குப்பை  'வீட்டைச் சுற்றி மரம் வளர்த்தால் வீசும் காற்று சுத்தமாகும்' என்ற சொல்லைக்கேட்டு, 'வீட்டின் முன்னே மரம் வளர்த்தால் வாசல் நிறைய இலை விழுமே வாரிப்போட யார் வருவார்?' என்ற கேள்வி வருவதுண்டு.... மரத்தின் இலை மண்ணுக்குரமாம், மண்ணிலிருந்தே வந்திடுமாம் மனிதன் உண்ணும் உணவெல்லாம்... காரை தினமும் எடுத்துக் கொண்டு கடையில்  பொருள்கள் பலவும் வாங்கி கூடை நிறைய நெகிழிப்பை கொண்டு நாம் வருகின்றோமே! ஆற்று நீரை அடைத்துக்கொண்டு  கடலின் உயிரைக் கொன்றுகுவிக்கும்  நெகிழிப் பொருளே உண்மையில் குப்பை! உண்மை குப்பை எதுவென்று உணரா மனிதர் நாமல்லாம், உணர்ந்து மாறுவதென்னாளோ... உலகம் அன்றே மாறிவிடும்! சுத்தம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்னவென்பதின் கருத்துப்படிவம் மாறல் வேண்டும் நீரும்  காற்றும் நன்றாய் நமக்குத் தேவை என்றால் இவ்வுலகில்!! 🌳🌴🌿🌱🌲☘️🍀🌴🌳🌲🌳 பல வருடங்களுக்கு முன்பு ஒரு பேராசிரியருடன் உரையாட நேர்ந்தது. அவர் பள்ளிக் குழந்தைகளை அடிக்கடி மலைகள் மற்றும் காடுகள் ஆகியவற்றுக்கு அழைத்துச் சென்று இயற்கையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உண்டாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் அடிக்கடி செல்ல

கோடை குளிர் பானம்

கோடை குளிர் பானம் கரோனா வந்ததிங்கு படைகொண்டு தாக்க கைதியாய் ஜெயிலுக்குள் அனுப்பியது நமையெலாம், ஆயிற்று திங்களொன்று உள்ளுக்குள் நாம் சென்று, கிடைப்பதைத் தின்று விட்டுக் களிப்புடன் இருக்கிறோம்!😀 கோடை காலம் ☀️  வந்திங்கு நாட்கள் பல ஆகியும் தொடவில்லை நாம் யாரும் கோலாவும் பெப்ஸியும்,🥤 செயற்கையாய் செய்துவந்த இன்னும் பல பானமும்! குளிர்பானம் இல்லாமல் குறையொன்றும் காணவில்லை சிறை வாழ்க்கையதிலேயும்.... கோடையிலும் தொடாத குளிர்பானம் கோலாவை கரோனா போனாலும்  கைதொடுதல் வேண்டாம்! நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லதாம் அதுவே, உடலுக்கும் உயிர் காக்கும் நன்மையும் அதுவே! மண்ணிலுள்ள  நீரையெல்லாம் உறிஞ்சியெடுத்து, மட்டில்லா சர்க்கரையை அதில் கலந்து,  குடியெனக் கொடுத்துவிடும்  குளிர்பானம், இலவசமாய் வந்தாலும்  இங்கேயது வேண்டாம்! 🥤🥥 🥤🥥🥤🥥🥤🥥🥤🥥 செயற்கைக் குளிர்பானங்கள் நான் பள்ளியில் படித்த காலத்தில் பான்டா என்றோரு குளிர்பானம் இருந்து.   ஆரஞ்சு வண்ணத்தில் சிறிய பாட்டிலில் பார்க்க அழகாக இருக்கும், குடிக்கவும் நன்றாக இருக்கும். பின்னர் சில வருடங்கள் கழித்து அது இல்லை. நம் ஊரில் தயாராகும் பானம் ஒன்று வந்திருந்த

சிக்கன் மட்டன்

சிக்கன் மட்டன் பசி வந்த நேரம் கூட்டமாக மேயும் மானினத்தைக் கண்டு, ஓட்டமாக ஓடிப் போய் வேட்டையாடி உண்ணும் காட்டுப் புலிகளும்..... சாகும் அந்த நிமிடம் வரை வாழ்ந்த மானுமே, காட்டினுள்ளே ஓடியாடித் திரிந்திருந்ததே, செழித்திருந்த பச்சைகளை உண்டு வாழ்ந்ததே! பிறந்து வந்த நிமிடம் முதல் கூண்டுக்குள்ளேயே  கைதியாக வைக்கவில்லை அந்தமானையே, அருமையான மிருகமான காட்டுப் புலியுமே! கூண்டுக்குள்ளே கோழியும் கொட்டிலுள்ளே ஆட்டையும் அடைத்து வைத்து வளர்த்து வந்து வெட்டி உண்ணும் ஓரினம் மனிதனென்னும் மானுடம். பிறக்கும் உயிர் எல்லாமே சாக வேண்டுமே ஐயப்படவில்லை அதை யாருமிங்கேயே! சாகும்வரை ஓடியாடும் சுதந்திரமில்லையெனில்.. கூண்டு வாழ்க்கை என்பது பிறந்ததுமே சாவது! பிறந்து வந்த நிமிடம் முதல் கூண்டிலடைந்து, கால்கள் கெஞ்ச நிற்பதற்கு, குற்றமென்ன செய்ததந்த சிறியக்கோழிக்குஞ்சு? நன்றி இல்லா மனிதனுக்கு உணவாகிப் போவதே, மகாபெரிய பெரிய குற்றம்... அதை உணரவில்லை கோழியே! ............ இல்லை உணர்ந்ததோ என்னவோ யாரறிவாரோ! 🐑🐏🐃🐂🐄🐔🐓🐣🐤🐥 கடாவெட்டும் கோழிக் குழம்பும் _______________________________

முருகன்

Image
முருகன் மனம் கவர்ந்த அழகன் மால்மருகன் முருகன் சின்னஞ்சிறுவயதிலே  சிந்தை வந்த சரவணன். கையில் ஏந்தும் வேலும், நீரணிந்த  நெற்றியும் இதழ் நிறைந்த புன்னகையில் அழகன் எந்தன் வேலன்! கம்பீர உருவத்தை நினைத்த மறுகணத்தில் மனதில்உறுதி தருமே குமரன் அவன் பலமே! எதுவென்றாலும் துணையிருப்பேன் அச்சமின்று மறந்து விடு, எந்தச் சூழல் என்றாலும் எந்தன் வேலை ஏந்திக் கொண்டு, அருகில் வந்து நின்றிடுவேன்! மனிதன் உன்னைக் காத்திடுவேன், மயிலும் பாம்பும் சேவலையும், கூடச் சேர்ந்து காத்திடுவேன், மலர்ந்து சொல்லும் பாவனையில் சிரிக்கும் முருகன் உருவமே!  🙏 இளமையில் பக்தி எங்களுக்குக் குழந்தை பருவத்தில் முருகனின் அறிமுகம் பள்ளிப்படிக்கும் காலத்தில் வருடம் ஒருமுறை பழனி செல்வதுதான். அம்மாவும் அப்பாவும் ஏதோ வேண்டுதல் இருந்ததற்காக ஆறு வருடங்கள் விடாமல் பழனி சென்றார்கள். ஏதாவது கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து இருப்பார், அல்லது நண்பரின் காரில் அழைத்துச் செல்வார் அப்பா. காரை நிறுத்திவிட்டு வின்ச்  எனப்படும் ஒரு கயிற்றால் இழுக்கப்படும் வண்டியில் மலையின் மேலே போவோம். ஓரிருமுறை யானப்பாதையிலும் நடந்து போய் இரு

வெயிலின் சுகம்

வெயிலின் சுகம் சித்திரை மாத வெயிலை தேகம் தாங்கமுடியலை! சுள்ளென சூடாய் அடித்து வேர்வை ஆறாய் ஓட, குளித்த குளிர்ச்சி குறைய, கோடைப் பருவம் பிடிக்கவில்லை சீக்கிரம் சென்றால் பரவாயில்லை! ஆனால் பாரு சின்னப்பையா! அந்த வெயில் தேவை பையா! வெயில் இல்லா பூமியிலே விளையும் பயிர் எங்கனம் வரும்? வெயிலும் நன்மை என்பதை விரும்பி மனம் ஏற்றுக்கொண்டால், உடம்பும் அதனைத் தானாகவே ஏற்றுக்கொண்டு மாறி விடும்! பிள்ளைப் பிராயம் பள்ளியிலே உச்சி நேர வெயிலிலே உணவின் பின் ஆடிய ஆட்டம்  நினைவில் நன்றாய் நிற்கிறது, ஆட்டம் கவனமாய் ஆடிய பின்னர், ஓட்டம் ஓடி அருந்தும் தண்ணீர், அதனினும் சுவை ஏதும் உண்டோ? ஆறாய்ப் பெருகும் வியர்வை அதன்பின்னே வரும் குளிர்ச்சி இரண்டும் நமக்கு என்றும் தேவை, ஆரோக்கியமாய் உடலைக்காக்க, காற்றைப் பதமும் குளிரும், ஆக்கி கொடுக்கும் யந்திரம் நமக்கென்றும் தேவையில்லை! ☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️ வெயில் அனுபவங்கள் பள்ளி கல்லூரி காலங்களில் கோடை விடுமுறைக்கு கிராமத்துக்குச் செல்வோம் அத்தை ஊருக்கு. அந்த ஊருக்கும் கோவைக்கும் சீதோஷ்ன   நிலையில் நிறைய வேறுபாடு இருக்கும் அங்கே வெய்யில் ச