Posts

Showing posts from February, 2020

அறமும் சட்டமும்

அறமும் சட்டமும் சமூகம் என்ற அமைப்பு சுமுகமாக இருக்க வேண்டி அமைத்துக் கொண்ட நடைமுறை சட்டம் என்ற வரையறை! அறம் என்ற நெறி அடங்கும் நியாயம் என்ற வரைமுறையில், எல்லாப் பொழுதும் இதனுள்ளே வர இயலா சட்டம் திட்டம்! அறத்தின்படி செய்ததை, சட்டம் சொன்னால் தவறென்று, தண்டனை மறுகணம் கிட்டிவிடும்! அறமும்நெறியும் தவறென்றாலும் சட்டம் அதை சரியென்றால் தண்டனை எதுவும் கிடையாது... நாடு விட்டு நாடு சென்றால் மாறிவிடலாம் சட்டம் திட்டம், நாடெதுவாயிருந்தாலும் அறநெறியென்பது ஒன்றே மட்டும்! நியாயம் வேண்டி மக்களெல்லாம் சட்டம் திட்டம் துணைகொண்டு தேடிப்போகும் வளாகம் நீதி காக்கும் மன்றம்! அறம் என்னும் நெறி காக்க மனசாட்சியென்ற ஒற்றைக்குரல் வேண்டிக்கொள்ளும் இடம் மனமென்ற மாமன்றம்! அறம் தவறிய சட்டம்👇🏼 இப்பொழுதெல்லாம் உலகில் நடக்கும் செய்திகள் அனைத்தும் நாம் கேட்காமலே நம் கைபேசியில் வந்துவிடுகின்றன, நிகழ்நிலை மூலம். அதில் ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானா என்ற நாட்டில் சமீபமாக ஒரு சட்டம் இயற்றப்பட்டு இருக்கிறது என்று படித்தேன். அதாவது வேண்டும் என்பவர்கள் அதற்கான அனுமதி வாங்கி யானைகளைக் கொன்று கொள்ள

அவசரமான அமேசான்

அவசரமான அமேசான் அவசரமான அமேசான், பணத்தைப் பறிக்கும் அமேசான்,    அதன் பின்னாலே நாமெல்லாம்! ஆணையிட்டாலே போதும் அன்றே வந்து சேரும்! இன்னும் சிறிது நாளிலே இந்த நிலைமை  மாறிடும் ஆணையிட்ட மறுகணமே பொருள் வந்து சேர்ந்திடும்! அவசரமாய் கையில் வந்து சேர்ந்துவிட்ட பொருளைக் கொண்டு சாதித்தது என்னவென்று என்னை நானே கேட்கின்றேன் எந்தன் மனமே பதிலை சொல்லு! முக்கால்வாசிப் பொருளெல்லாம் சிறிது நேரம் எந்தன் கையில் பின்னர் போகும்  மூலைக்கொன்றாய்! ஆலாய்ப் பறந்து ஆத்திரமாய் அவசரமாய்ப் பணத்தைப்போட்டு வாங்கிக் குவிக்கும் பொருளெல்லாம், வீட்டின் இடத்தை அடைப்பதையல்லால், வேறென்ன செய்யும் அத்தனை பொருட்கள் சின்னஞ்சிறிய வாழ்நாளுல்? வீட்டின் வெளியே எட்டிப்பார்த்து வாழ்க்கை என்றால் என்னவென்று கொஞ்சம் கூடப் பார்க்காமல் வெட்டிப்பொருளை வாங்கிக் குவித்தால், எப்படி அது வாழ்வாகும்? வாழ்க்கையிது வாழ்க்கையா நுகர்ந்தோட்டப்பந்தயமா? குழப்பமாகுது மனமிங்கு, சற்றே நின்று ஓய்வெடுத்தால்  சிந்தையது தெளியுமோ? பிகு: தாங்கள் நினைக்கும் அளவுக்கு வேகமாக டெலிவரி செய்ய முடியாத சில புதிய பார்சல் ஏஜென்சிகளின் கான்

தானே பெற்றது

தானே பெற்றது தானே வந்த ஞானம், என்றும் உள்ளது உறுதுணையென்று சொல்லிக் கொடுத்த சொல்லும் நிற்பதில்லை நிலையென்றிங்கே! பள்ளியிலே வாத்தியாரும் வீட்டினிலே பெற்றோரும் கேளப்பா கேளென்று சொல்லிக்கொடுக்கும் எந்தச் சொல்லும் செவியினிலே பட்டவுடன் பறந்திடுமே வெளியினிலே! யாரும் எதுவும் சொல்லாமல் அனிச்சையாகத் தானே ஏதோ ஒன்றைக் கண்டு எண்ணமதிலே லயிக்க விழிகள் அதை நோக்க செவிகள் அதைக்கேட்டு அம்பெனச் சென்று பதியுமது மனதில்..... அதிலே வந்த ஞானம், இறுதிவரை நின்றிடும் மறையாது அதென்றுமே! சொல்லிக்கொடுக்கும் சொல்லும் திணிக்கப்படும் அறிவும் சென்றிடாது உள்ளே திரும்பிடுமது சொல்லுமிடம். தானே கொண்ட அறிவும் சுயமாய் வந்த ஞானமும் சென்றிடாது வெளியினிலே தங்கிடுமது மனதின் உள்ளே, துணை இருக்கும் என்றுமே வாழ்க்கையெனும் பயணத்திலே! 👇🏼 சொல்லாமல் கற்றது நான் கார் ஓட்ட கற்ற புதிதில் அப்பொழுதுதான் க்ளட்ச்  பிரேக் அக்ஸளரேட்டர்  முதலியவை எனக்குப் பரிச்சயமான அந்த சமயத்தில் ஒருநாள் நான் பஸ்ஸில் முன்புறம் நின்றபடி பிரயாணம் செய்து கொண்டிருந்த பொழுது ஏதோ நினைப்பில் என்னை அறியாமல் என் கண்கள் பஸ் டிரைவரின் கா

அன்பும் காதலும் இயற்கையின் நியதி

அன்பும் காதலும் இயற்கையின் நியதி 👭👬👫 இயற்கையில்லா அன்பும் உண்டோ? அன்பென்றாலே இயற்கைதானே! 'இவ்விடம் மட்டும் அன்புடன் இரு அவ்விடமிருந்தால் இயல்பல்ல. இவ்வாறிருந்தால் இயற்கை அன்பு, அவ்வாறிருந்தால் இயற்கையல்ல, சட்டப்படி அது அன்பேயில்லை! சட்டம்  சொல்லுவதென்னவோ அதுவே இயற்கை என்பது! சட்டம் ஒரு கால் மாறியதென்றால் அன்பும் அன்றே மாறல் வேண்டும்!' என்று சட்டம் தீட்டும் நாடெல்லாம் எவ்வாறாகும் சுதந்திர நாடாய்? அடுத்தவர் வாழ்வில் நுழைவது தவறு அவரது சொத்தை எடுப்பதும் தவறு, அவருக்குத் துன்பம் கொடுப்பது குற்றம் இதற்கு வேண்டும் சட்டம் திட்டம். இயற்கையில் வந்தது மனமும் குணமும் இதிலே பிறந்தது அன்பும் ஆசையும்,  சட்டம்  சமூகம் மாறென சொன்னால் சொன்னதும் மாற மனமொரு மிஷினா? சுதந்திரம் என்பது வாழ்வின் மூச்சு சுவாசம் அதுவே எல்லா உயிர்க்கும்...! அன்பிற்கோர் மட்டம்  என்றதொரு சட்டம் நில்லாதென்ற கட்டம் என்பதிங்கு வந்தால் இல்லையொரு நட்டம்! ஏனெனில்... இயற்கையின் அமைப்பில் பிழையில்லை இயைந்து வாழ்ந்தால் குறையில்லை! மனிதக் கூட்டம் இப்படிப் பெருக- பூமியிலே மனிதக் கூட்டம் இப்படிப் பெருக காரணம் யாதென சிந்தித்தால், இ

குட்டி நாய்

குட்டி நாய் அங்கும் இங்கும் குதித்தோடிய குட்டி நாயின் சொக்கும் அழகில் மயங்கிப்போன அப்பாவும், வாங்கி வந்த நாய்க்குட்டி வளருது வீட்டில் சுகமாக ! மூன்றுவேளை சோறும்பாலும் முட்டை மாமிசம் சில நேரம், அனைவர் மடியிலும் செல்லமாக அமர்ந்து கொள்ளும் பலநேரம்! வருடம் ஒன்று போனது நாயும்  பெரிது ஆனது குழந்தைப்பருவ அழகில்லை மடியில் இடமும் போதவில்லை 'பையன் பரீட்ச்சை நேரமிது நாயின்  தொல்லை தாங்கவில்லை தூரச் சென்று விட்டு விடுவோம் நாய் நமக்கினி தேவையில்லை' தாயார் சொன்னார் அன்று தந்தை கொண்டு விட்டார் சென்று. உலகம் என்றால் என்னவென்று அறியா அந்த நாய்க்குட்டி அன்பு குடும்பம் எங்கே என்று அலையும் அந்த நாய்க்குட்டி. ஐயோ பாவம் என்ன செய்யும் ? தெருவே வீடாய்க் கொண்ட நாய்கள் அலைந்து திரியும் பெரிய நாய்கள் புதிதாய் வந்த சின்ன நாயை கடித்துக் குதறி கொன்று விட வாய்ப்பும் நிறைய உள்ளதே... 👇🏼 வீட்டு நாய் எங்கள் வீட்டு செல்ல நாய் பாப்பாத்திக்கு நான்கு வயதான பொழுது அவள் ஐந்து குட்டிகள் ஈன்றெடுத்தாள். ஐந்தையும் கண் போல பாதுகாத்து ஒரு மாதம் வரை தினமும் நான்கைந்து முறைகள் சுத்தம

செல்லப் பிராணிகள்

செல்லப் பிராணிகள் வீட்டிலே செல்லமாய் வளர்த்திடும் விலங்குகள் குறைத்திடும் மனதில் நாம் உணர்ந்திடும் அழுத்தத்தை, என்கிறார் மனநோய் மருத்துவரனைவரும்! உண்மையுமுண்டு அவர்கள் உரையதிலே, உணர்ந்தேன் நானும் இதை வீட்டில் பலமுறை, செல்லமாய் நாய் இரண்டு நான் வைத்த பொழுதினிலே! எனதருமை க்ளியோ அவளருமை பாப்பா இருவரும் இருந்தவரை தனிமை நான் உணரவில்லை. எனிலும் பலமுறை  தோன்றிடும் எண்ணமிது, அழுத்தமது  நம்மனதில் குறையுமதில் ஐயமில்லை! எனில் கட்டி வைக்கும் நாயும், தொட்டிக்குள் மீனும், கூண்டில் இடும் பறவையும் எத்துனை அழுத்தத்துடன் வாழ்ந்து முடிந்தது.....  ஆறறிவு மனிதர் நாம் அறிந்தோமா என்றாகிலும்? பாப்பாவும் க்ளியோவும்👇🏼 என் மூத்த மகன் பத்தாவது பரீட்சை முடித்து சென்னைக்கு வந்துவிட்டான், பதினொன்று பன்னிரண்டாம் வகுப்பு படிக்க. நாங்கள் அப்பொழுது பெங்களூரில் குடியிருந்தோம். அவன் தன் தாத்தா பாட்டியுடன் சென்னையில் தங்கி படிப்பேன் என்று வந்து ப்ளஸ்1 சேர்ந்துவிட்டான். அதுவரை ஒன்றாகவே வளர்ந்த  இருவரும் முதல் முறையாக பிரிந்ததால்,  இளைய மகன் கொஞ்சம் சோர்ந்ததுபோல் காணப்பட்டான். ஆகையால் அவனை உற்சாகப்பட

முழுமையின் மகிமை

முழுமையின் மகிமை மலரும் காதல் உறவில் தளங்கள் எத்தனை உண்டென்று யாரும் எண்ணிப் பார்த்தோமா? இளமைப்பருவ ஈர்ப்பின் மூலம்    இருவருக்கிடையே மலரும் உறவு நிலைத்திருக்கும் சில காலம், பிரிந்தும் போகும் பல நேரம்! உறவில் உள்ள தளங்களிலே ஈர்ப்பென்பது ஒன்றே ஒன்று! ஒன்றை மட்டும் நம்பியிருந்தால் நீடிக்காது உறவது என்றும்! அறிவும் உணர்வும் கொள்கைப் பிடிப்பும் உறக்கம் விழிப்பு உணவுப்பழக்கம் என்பது போன்ற  தளங்கள் பலவும் ஓரளவேனும் ஒன்றாய்ச் சேர்ந்தால், நிற்கும் அது நீண்ட உறவாய்! மனிதன் வாழ்வும் இதுபோன்றே பொருளாதாரம் வருமென்று பொழுதெல்லாம் வேலைப்பார்த்து வருமானம் எல்லாம் வந்தாலும், அதுவே வாழ்க்கை ஆகாது! மனிதன் வாழ்வில் பல முகம் உண்டு உணவும் உடையும் ஒருமுகமே! சமூக விலங்காம் மனிதனுக்கு உறவின் பலமும் மனதின் வளமும் சேராமல் வாழ்க்கை முழுமை அடையாது! முழுமையடைந்த மனிதன் வாழ்வு என்றும் மாறாதிருந்திடவே, நன்றாய் பூமி  நிலைத்தாலே வாழ்க்கை நின்று நடக்க முடியும்! பூமியென்பது அக்ஷ்யமல்ல எடுக்க எடுக்க வருவதற்கு, தேவை மட்டும் எடுத்துக்கொண்டு அதனினும் அதிகம் திருப்பிக் கொடுத்தால், என்றும் பூ

அவரும் இவரும்

அவரும் இவரும்           "சுற்றுச்சூழல் காத்திட மரந்தனை வளர்த்திட நீர்நிலை நிலைத்திட நெகிழியை ஒழித்திட 'செய்' என்று கூறும் அன்புத் தோழியே கேள்வி ஒன்று கேட்கிறேன் பதிலினைப் பகருங்கள். நான் மட்டும் செய்தால் பயனென்ன சொல்லுங்கள் மற்றவர் மாறா நிலை இருந்தாலே?" என்று கேட்கும் நண்பர்களே பகருகிறேன் கேளுங்களேன்! பசி என்ற போது நாம் மட்டும் உண்டோம் வளம் வந்தபோது நாம் வைத்துக்கொண்டோம், கடை சென்று வாங்குவது நமக்கு மட்டும் தானே? நம் குடும்பம் நம் குழந்தை நலம் பார்த்துக்கொண்டோம், யார் என்ன செய்தாலும் செய்யாமல் விட்டாலும்! பொருள் ஈன்றதெல்லாம் நம் குடும்பம் வாழ பொருள் சேர்ந்தபோது நாம் வைத்துக்கொண்டோம் அவனுக்கில்லை இவனுக்கில்லை யோசிக்க வில்லை! பிறந்தோம் வளர்ந்தோம் பள்ளியில் படித்தோம், வேலை ஒன்று வாங்கினோம் மணம் புரிந்து கொண்டோம் குழந்தை தவழ்ந்தது மகிழ்வுடன் முகர்ந்தோம்! நண்பர் மணம் புரியவில்லை நண்பருக்கு மழலையில்லை என்ற கேள்வி எழுப்பவில்லை! தனக்கென்று வந்தால் தயங்காமல் செய்வோம் தாய்க்கொன்று என்றால்- பூமித் தாய்க்கு ஒன்று என்றால், அவர் எங்கே இவர

தோள்ல் பை

தோள்ல் பை தோலில் ஆடை வாங்கியணிந்து, அதே தோலில் கைப்பையும்,   காலில் செருப்பும் கையில் உறையும், வாங்கிப் போடும் சின்னக்குட்டி பெரியதங்கம், செவியைத்தீட்டிக் கொள்ளுங்கள்! பாவம் அந்த விலங்கிடமிருந்து, தோலை எப்படி உரித்தார் என்று நிறுத்தி நின்று விசாரித்தால்.... தோலின் மென்மை மாறா வேண்டி உயிருடன் விலங்கு இருக்கும்போதே அவ்வப்போது சில நேரம் தோலை உரிக்கும் வாய்ப்பும் உளது😰 செயற்கை தோலில் செய்த உடையும் பையும் செருப்பும் உறையும் வாஞ்சையுடன் வாங்கிக்கொண்டால் துடிக்கும் வேதனை இல்லாமல் பிழைக்கும் அந்த விலங்கினம். மாடு முதலை நரி என்று அவர்களின் மேலே உள்ள தோலையும் தோலைக் காக்கும் முடியையும் எடுத்து உடைகள் செய்யும் பழக்கம் எதற்கு தோழர்களே? தோலில் செய்த உடைகளைப் அணிந்து, குரூரத்தின் சின்னம் என்று, கண்டிப்பாக மாறத் தேவை என்ன வந்தது உலகில் இங்கு? நம்மாலான சாதனை நிறைய உண்டு நாம் செய்ய, அதிலே வரும் கிளர்ச்சி அணியும் உடையில் வருமா? 👇🏼 பட்டுத்துணியும்  தோல்பையும் தமிழ் திரைப்பட ரசிகர்கள்  கிட்டத்தட்ட அனைவருமே      'அவ்வை சண்முகி' என்ற கமல்ஹாசனின் படம் பார்த்திருப்பா

கைக்குட்டை

கைக்குட்டை சின்னச் சின்ன துணித்துண்டு விளையும் பருத்தித் துணித்துண்டு கைக்குட்டை என்று பெயரிட்டு கையை முகத்தைத் துடைத்து துவைத்து மடித்து வைத்தோம் சுத்தவத்தம் காத்தோம்! சின்னச் சின்ன காகிதம் மரத்தை அறுத்து செய்தது டிஷ்யூ என்று பெயர் வைத்து கையை முகத்தைத் துடைத்து குப்பை கூளம் சேர்க்கிறோம் பூமி தனைத் கெடுக்கிறோம்! எங்கும் டிஷ்யு 👇🏼 விழாக்கள் மற்றும் வீடுகளில் இன்று கிட்டத்தட்ட டிஷ்யூ இல்லாத இடமே இல்லை என்று கூறலாம். இந்த பத்து வருடங்களாக தான் இது மிகவும் அதிகமாக இருக்கிறது. வீட்டில்  வெளிநாட்டிலிருந்து வரும் உறவினர்கள் தங்கும் பொழுது அவர்கள் நிறைய டிஷ்யூ கொண்டுவந்து சமையலறை மேடையைத் துடைப்பதற்குக் கூட இரண்டு மூன்று டிஷ்யூவினால் துடைத்து விட்டு அலட்சியமாக வீசிவிட்டுப் போகிறார்கள். பார்க்கும்போதே பகீரென்று இருக்கும் அந்த ஒரு காகிதத்தை செய்வதற்கு எத்தனை மரத்தை வெட்டினார்கள் என்று தெரியவில்லை. சாதாரணமாக நாம் துணியை வைத்துத் துடைத்து அதனை அலசிப் போட்டால் கிட்டத்தட்ட ஒரு துணியே மூன்று மாதத்திற்கு வரும். பெரிய சிரமம் எதுவும் இல்லை. வீடுதோறும் அங்கங்கு சிறிய துணித் துண்டுகள

ரசாயனம் தேவையா

ரசாயனம் தேவையா? பாத்திரம் கழுவப் பணம் போட்டு வாங்கிக் குவிக்கும் கட்டியும் நீரும் சுற்றுச்சூழலை மட்டுமல்ல, வயிற்றுச் சூழலும் கெடுத்துவிடும். பாடுபட்டு சேர்த்த பணத்தை பறித்துச் செல்லக் காத்திருக்கும் என்னைப் போன்ற மருத்துவரும் பணம்படைத்த வியாபாரியும் பயனடைவார் இதனாலே! வீட்டிலேயே எல்லோரும் வைத்திருக்கும் மாவுகள் வயிற்றுக்குள் சென்றாலும் வாதனையெதுவும் செய்யாது.... அரிசி மாவு மைதா மாவு இட்லி மாவு கடலை மாவு, வேறெந்த மாவு என்றாலும் மாய்ஞ்சு மாய்ஞ்சு தேய்க்கலாம் பாத்திரத்தை நாமெல்லாம் பள பளன்னு செய்யலாம்! வயிற்று வலி ஏதுமின்றி வாழ்க்கையை நடத்தலாம்! கழுவிப் போகும் நீரின்மிகுதியில் கவலை ஏதும் இல்லாமல் காய்கறிகள் வளர்க்கலாம்! 👇🏼 சமையலறை பள்ளி சென்ற காலத்தில் சாம்பலும் இலுப்பத்தூளும் கலந்து பாத்திரம் தேய்த்து கழுவியது ஞாபகமிருக்கிறது. சாதாரண பாத்திரத்துக்கு வெறும் உமி சாம்பல் (அரிசி ஆலைகளில் கிடைப்பது)  , எண்ணைக்கறை பாத்திரமாக இருந்தால், இலுப்ப தூள் கொடுப்பார்கள் வீட்டில், அதைக் கலந்து நன்றாக தேய்த்து கழுவினால் பாத்திரம் பளபளவென்று மின்னும். இருவர் கழுவும் பொழுது ஒருவர்

யானையின் மேன்மை

யானையின் மேன்மை யானைகளின்  கூட்டம் ஒன்றைக் காத்து வந்த மாமனிதர் இறந்து போன நாளன்று- அவர் காத்த யானைக்கூட்டம் காத தூரம் நடந்துவந்து, துக்கத்திலே கலந்துகொண்டு சோறு தண்ணி வேண்டாமென்று இரண்டு நாட்கள் காத்திருந்து, திரும்பி நடந்து சென்ற கதை மனைவியவர் சொன்னார் மனம் கனிந்து நின்றார்! இறந்த செய்தி எங்கனம் அந்த தூரம் கடந்து சென்று யானை அதை உணர்ந்தது? எவ்வாறிது நடந்தது? விந்தையிலும் விந்தையென்று சிந்தை இன்று எண்ணுது! எல்லாமே நமதறிவு விளங்கித் தான் விடுமென்று எண்ணம் நாம் கொண்டோம் என்றால் எள்ளித்தான் நகைத்திடும் பரந்திருக்கும் பிரபஞ்சம்! வாழ்ந்திருக்கும் பூவுலகில் விரிந்திருக்கும் அகிலத்தில் இன்னும் நம் மனமுணரா எத்தனையோ உண்டென்று அறிய வேண்டும் நாமின்று! நம் அறிவு சிறிதென்று நாமென்று உணர்வோமோ, அன்றே தொடங்கிவிடும், ஞானமெனும் திசை நோக்கி நமதறிவு தன் பயணம்! ஞானம் எதற்கென்று வினாவெழுப்பும் நண்பரே, அங்கனம் இதை நோக்கின் எதுவும்தான் எதற்கென்று என் மனம் வினவுதே! அடைந்தால்தான் விளங்கும் அதன் பயன் என்னவென்று! எனக்கொருநாள் ஞானம் வந்ததெனில், அந்த நாள் நானும் விளக்கிட

Jane Austen

Jane Austen ஆங்கிலத்தில் ஆறு அருமையான கதைகள் எவை என்று கேட்டால் இவை என்று கைநீட்டித் தயங்காமல் சொல்வேன். ஜேன் ஆஸ்டன் என்ற அபூர்வப் பெண்மணி சிந்தையில் உதித்த சிரிப்புடன் கூடிய அருமைக் கதைகள் அவையாறும் என்பேன். மனிதரின் மனம் மாறும் விதங்கள் அவரின் சிந்தை போகும் தடங்கள், அன்பு காதல் சோகம் விருப்பு வெறுப்பு குரோதம் இன்னும் எத்தனை உணர்ச்சிகள் மனித மனதின் உள்ளே, காதல் மலர்வது எவ்வாறு அது வெல்வதும் தோற்பதும் ஏனென்று..... மனிதனின் வாழ்க்கைப் பாதையை உணர்ச்சிகள் மாற்றும் விந்தையை.... இதைவிட யாரும் தெள்ளத் தெளிவாய் நகைப்புடன் கூற முடியாதென்று  முடிவு செய்தது என் சிற்றறிவு! ஆனால் அந்த அம்மையார், அருமைக் கதைகள் ஆறைக் கொடுத்தவர், அகவை நாற்பத்தி இரண்டில் இயற்கை எய்திப் பிரிந்து போனார். இத்துனை  சிறிய வயதிற்குள் எத்துனை அறிவும் அதனின் செறிவும்! பலமுறை படித்தேன் 👇🏼 Pride and Prejudice என்பதுதான் நான் முதலில் படித்த ஜேன் ஆஸ்டின் நாவல். கிட்டத்தட்ட அவருடைய நாவல்கள் அனைத்துமே காதல்கதைகளாகத்தான் இருக்கும். ஆனால் வெறும் காதலர்கள் மட்டும் இருப்பதில்லை அவருடைய கதைகளில்.