கோழி ஓர் அன்னை..🐔
ஓரடி கூண்டில் நின்றவாறே
வாழ்வைக்கழிக்கும் லேயர் கோழி
தினம் ஒரு முட்டை இட வேண்டும்-
திறந்து நிற்கும் மனிதன் வாய்க்குள்
அந்த முட்டை உருண்டோடவே..!
ஒரிரு வருடம் ஆன பின்னே கோழியின் கழுத்தை அறுப்பதும் அவனே
வறுத்து வாயில் அடைப்பதும் அவனே....
மனிதன் கையில் இந்தத் துன்பம் அடையக்கோழி செய்த குற்றம் யாவதென்று சொல்லுங்கள்!
அப்படி என்ன கோழியின் முட்டை உண்ணத் தேவை வந்தது நமக்கு?
புரதச்சத்து பருப்பில் உண்டு கொழுப்புமந்த எண்ணெயில் உண்டு
விட்டமின் வாழைப்பழத்தில் உண்டு
முட்டையின் ருசியும் டோஃபுவில் உண்டு....!
Comments
Post a Comment