செடி கொடிக்கும் வலிக்குமே....!


 

செடிக்கும் கொடிக்கும் உயிர் உண்டே, 

வெட்டும்போது வலிக்காதா என்றே கேட்கும் அன்பர்களுக்குக்

கேள்வி ஒன்றை வைக்கின்றேன்- 

நெஞ்சைத் தொட்டு கூறுங்கள்!


ஆட்டுக்கறியும்  மாட்டுக் கறியும் பன்றிக் கறியும் சிக்கன்துண்டும்

முட்டை பாலும் மீன் குழம்பும் ருசியில் மணத்தில் குறைவாய்ப் போனால்-

தாவர உணவினும் .....ருசியில் மிகவும் குறைவாய்ப் போனால்,


 'ஐயோ!.. செடிக்கு வலிக்குமே! 

நாவின் சுவை குறைவென்றாலும், ஆடே வெட்டித் தின்கிறேன்'!

அதுவே போதும் என்பீரா?

இல்லை! இல்லை! 

ருசிதான் வேண்டும்

செடியை வெட்டித்தாருங்கள்

என்று வாங்கி உண்பீரா?


☘️🌱🌿🌶️🥭🍊🍑🍉🍎🍒☘️🌱🌿


பல வருடங்களாக அசைவ உணவு உண்டவர்கள்தான் இன்று நனி- சைவமாக மாறி இருக்கும் பல பேர். அவர்களுக்கெல்லாம் தெரியும்- எனக்கும் தெரியும்...... அசைவ உணவு உண்பதற்கு ஒரே காரணம் அதன் ருசி தான், வேறு எந்த காரணம் கூறினாலும் அவை எல்லாம் சரக்குப் போக்கு தான். இதை அடித்து கூறுகிறேன்- ஏனென்றால் நானும் பல வருடங்களாக விரும்பி சிக்கன் சிக்கன் பிரியாணி, மீன் குழம்பு சாதம், ஆம்லெட், தயிர் மற்றும் கறந்த பாலில் பிரெஷாகத் தயாரித்த பில்டர் காபி அனைத்தும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள் தான்......


🌶️🥭🍊🍑🌳🌱🌴🥦🍓🍒🍉


Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

புலியும் முறமும்

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

மாட்டுப் பொங்கல்

விலங்குகள் நம் போலவே அவர்களுக்கு நீதி தேவை

வாசலில் மண்புழு

டையப்பர் 👶

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd