செடி கொடிக்கும் வலிக்குமே....!
செடிக்கும் கொடிக்கும் உயிர் உண்டே,
வெட்டும்போது வலிக்காதா என்றே கேட்கும் அன்பர்களுக்குக்
கேள்வி ஒன்றை வைக்கின்றேன்-
நெஞ்சைத் தொட்டு கூறுங்கள்!
ஆட்டுக்கறியும் மாட்டுக் கறியும் பன்றிக் கறியும் சிக்கன்துண்டும்
முட்டை பாலும் மீன் குழம்பும் ருசியில் மணத்தில் குறைவாய்ப் போனால்-
தாவர உணவினும் .....ருசியில் மிகவும் குறைவாய்ப் போனால்,
'ஐயோ!.. செடிக்கு வலிக்குமே!
நாவின் சுவை குறைவென்றாலும், ஆடே வெட்டித் தின்கிறேன்'!
அதுவே போதும் என்பீரா?
இல்லை! இல்லை!
ருசிதான் வேண்டும்
செடியை வெட்டித்தாருங்கள்
என்று வாங்கி உண்பீரா?
☘️🌱🌿🌶️🥭🍊🍑🍉🍎🍒☘️🌱🌿
பல வருடங்களாக அசைவ உணவு உண்டவர்கள்தான் இன்று நனி- சைவமாக மாறி இருக்கும் பல பேர். அவர்களுக்கெல்லாம் தெரியும்- எனக்கும் தெரியும்...... அசைவ உணவு உண்பதற்கு ஒரே காரணம் அதன் ருசி தான், வேறு எந்த காரணம் கூறினாலும் அவை எல்லாம் சரக்குப் போக்கு தான். இதை அடித்து கூறுகிறேன்- ஏனென்றால் நானும் பல வருடங்களாக விரும்பி சிக்கன் சிக்கன் பிரியாணி, மீன் குழம்பு சாதம், ஆம்லெட், தயிர் மற்றும் கறந்த பாலில் பிரெஷாகத் தயாரித்த பில்டர் காபி அனைத்தும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தவள் தான்......
🌶️🥭🍊🍑🌳🌱🌴🥦🍓🍒🍉
Comments
Post a Comment