விடுதலை





அல்லலான ஆட்சி 
ஆங்கிலேய ஆட்சி
அனுப்பிவிடு வெள்ளையனை ஆங்கிலேய நாட்டுக்கென்று,
வீரத்துடன் கேட்டு 
விடுதலை வேண்டுமென வெற்றியுடன் வாங்கினோம்,
நம் வாழ்வு நமக்கென்று
வீறுநடை போட்டோம்..
விடுதலை! விடுதலை!விடுதலை!

 
அடிமை வாழ்வு வாழ்ந்த போது நாமடைந்த கொடுமை,
ஜாலியன்வாலா பாகில்
அடைத்து சுட்ட அக்கிரமம்...
அதனை விடக் கொடுமை,
இன்று நாம் செய்கிறோம்
வாயில்லா ஜீவனை...
கூண்டிலே வைக்கிறோம்,
மூக்கிலே துளைக்கிறோம்
கயிறு கொண்டு கட்டி 
பாலைப்பிடுங்கிக் குடிக்கிறோம்.
பால் கொடுத்த ஜீவனை 
அறுத்து வறுத்து உண்ணுகிறோம்...
நன்றி இல்லா நரகம்
மனிதன் வாழும் உலகம்!

நாம் அடைந்த விடுதலை விலங்குக்குக் கொடுப்போமா இந்தியனே தமிழனே சிந்தனை செய்யலாமே...?










 

Comments

Popular posts from this blog

Almond coffee பாதாம் பால் காபி

நகரும் 🐌 நத்தை

பொன்னாடை துணி

மாட்டுப் பொங்கல்

வாசலில் மண்புழு

சிந்தனை சோம்பேறி

நனிசைவ தயிர் Vegan curd

சுலப சாம்பாரும் சிந்திக்க ஒரு நிமிடம்

பக்திப் படம்

🥼👩‍🎓 🐓