Posts

Showing posts from March, 2020

படமும் புத்தகமும்

படமும் புத்தகமும் 🙇 புத்தகம் ஒன்று படித்தவுடன்  திரைப்படம் ஒன்று பார்த்தவுடன் ஏன் என்றறியா  ஏதோ மாற்றம் நிகழ்ந்து முடிந்து மனதுக்குள்ளே, சிந்தனை சிறிதே மாறி மேலோரு படி ஏறி, எல்லாவற்றின் மறுபக்கம் என்னைப் பார்க்க வைத்து..... சின்னச் சிறுவன் தம்பியின் மகன் இயன்றான் ஒரு நாள் என்னிடம் வந்து 'கணினியில் ஆடும் விளையாட்டைக்  குறைவாய் எடை போடாதே,  வாழ்வின் பாடம் அதிலும் உண்டு அறிந்து கொள்வாய் அத்தை நீயே' அதுபோல் ஏதோ தெளிந்து விட்டோம்  என்று வந்த தன்னிறைவு! உன்னதமான படைப்பென்றால்  இதுவேதானோ அதுவென்று என் மனம் கூறுது அடிக்கடியே! அப்படிக் கூறிய சிலவற்றை  பகிர்ந்தேன் இங்கே நண்பர்களே! 12Angry Men  திரைப்படமும் Millennium Trilogy  புத்தகமும்!  👇👇👇👇👇👇👇👇👇👇👇 🖥️📖📚📀🗞️📕📝🖋️✒️🖌️📜 சில வருடங்கள் முன்பு வரை புத்தகம் படிப்பது அதுவும் கதை புத்தகம் படிப்பது என்றால் கிட்டத்தட்ட ஒரு வெறி போல் எந்நேரமும் படித்துக் கொண்டிருப்பேன். சிறுவயதிலிருந்தே அப்படி ஒரு பழக்கம். நான் படித்த பள்ளியில் நல்லதொரு நூலகம் இருந்தது. தமிழ் ஆங்கி

வீடும் அறையும்

வீடும் 🚿 அறையும் வீடென்ற புகலிடம் நிம்மதி தருமிடம். பெற்றவர் மற்றும் மணந்தவர், மணந்தவருடன் நாம் பெற்றோர், என்ற மக்கள் ஒன்று கூடி குடும்ப மாக மகிழ்ச்சி காண முயன்று கொண்டிருக்குமிடம். நாளில் பாதி  தொழிலுக்கு மீதிப் பாதி வீட்டிற்கு அதிலும் பாதி ஓய்விற்கு மிஞ்சியிருக்கும் நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாய் இருக்க முயற்சி நடக்கும்! முயன்ற நேரம்போக இருபத்தி நாலு மணியிலே, உடலென்னும் கோவிலை உள்ளும் புறமும் தூய்மை செய்ய இருப்பதோர் அரை மணி. அரை மணிக்குத்தேவையா ஆளுக்கொரு குளியலறை? ஏனைய நேரம் அவ்வறை வீனாய்க் கிடக்கப்போகிறதே? ஆளுக்கொன்றில்லாமல் வீட்டுக்கொன்று போதாதா தூய்மை செய்வது சுளுவாச்சே ! அறைக்குள் அமர்ந்து நாம் குளித்தால் அதனால் படியும் அழுக்கைக் கழுவ போடும் ரசாயனப் பொடி யாவும் சூழல் கேட்டை விளைவித்து பூமியில் பல்லுயிர் பெருக்கத்தைத் தடுக்கும் பொடியே என்பேன் நான்! 👇👇👇👇👇👇👇🏼👇👇👇👇 🛀🏊🚿🛁🚽🚿🚽🚿🛀🏊🚿 நான் வளரும் பருவத்தில் பார்த்த, குடியிருந்த வீடுகள் அனைத்திலும் குளியலறை என்பது வீட்டின் பின்புறம் சிறிது ஒதுக்குப்புறமான ஒரே அறையாக இ

தோரோவின் வால்டன்

தோரோவின் வால்டன் அமெரிக்க நாட்டில் பிறந்து அன்னை பூமி அருமை அன்றே அவரும் உணர்ந்து, சின்னஞ் சிறிய அறை ஒன்று காட்டினுள்ளே கட்டிக்கொண்டு தன்னந்தனியே வாழ்வொன்று வாழ்ந்து பார்த்தார் தோரோவென்ற சிந்தனையாளர், அவர் வயதப்போது இருபத்தேழு! அணியும் ஆடை ஒன்றே ஒன்று, அதுவும் போக பொருட்களெல்லாம் ஒருவர் தேவை என்னவோ அவையே மட்டும் உண்டங்கே! காட்டில் தானே பயிரிட்டு தேவைக்களவாய் உணவெடுத்து, இயற்கையோடு ஒன்றாய் இருந்து, இயைந்து வாழ்ந்த வாழ்க்கை இருந்ததெப்படி என்பதை இயம்பித்தந்தார் உலகிற்கு, சின்னஞ்சிறிய புத்தகமொன்றில்! தேவைக்கதிகம் எது சேர்ந்தாலும் அதுவே திருப்பும் நம் மனதை மெய்யறிவை நாம் உணரா வண்ணம் என்பது தோரோ என்பவர் எண்ணம்! குறைவே நிறைவென வாழ்நத தோரோ, காட்டில் கட்டிய சிறு வீடு, இருந்தது வால்டன்  குளக்கரையில், குளமும் சுற்றிய காடும் சொந்தம் அறிஞர்  எமர்சனுக்கு. தோரோவுக்குக் கொடுத்தார் அதைக் காட்டில் தனியே வாழ்வதற்கு... வாழ்ந்து பார்த்த தோரோ வருடம் இரண்டு முடிந்ததும் வரைந்தார் அந்த அனுபவத்தை 'வால்டன்' என்ற புத்தகத்தில்! இன்றைய வேக வாழ்க்கையிலே இந்தச் சிறிய புத்தக

குறைவே நிறைவு

குறைவே நிறைவு💃 குறைவே நிறைவு நிறைவே நிம்மதி, என்றொரு முடிவில் வருமொரு விடுதலை. விடுதலை என்பது தருமொரு சுகம் அடைந்தால் புரியும் சுகத்தின் அருமை! அடுத்தவர் என்பவர் எதை வாங்கினாலும், எனக்கிது போதும் என்றொரு முடிவு எடுக்கும் தீர்க்கம் இருக்கும் வரைக்கும், நிம்மதி என்பது நமக்கே சொந்தம்! அடிப்படை உணவு அடிப்படை உடை இதற்குமேலே எது வாங்கினாலும், வீண் மட்டுமல்ல, வீட்டையும் அடைக்கும். வெளியிலுள்ள விசால உலகம் அறியா வண்ணம் விழிகளை மறைக்கும் வெட்டிப் பொருட்கள் மீதொரு மயக்கம். 👇👇👇👇👇👇👇👇👇 🦉🦅🐦🦜🕊️🦢🦃🦆🏠 நாம் அப்படி இருந்தால், இப்படி உடுத்தால், இதுபோன்ற உணவு உண்டால், இந்த வண்டியில் போனால்,....... அடுத்தவர் என்ன நினைப்பார்? மற்றவரிடம் நம் மதிப்பு என்னவாகும்? என்ற இது போன்ற எண்ணங்கள் தரும் ஒரு இடைஞ்சலும் மன உளைச்சலும் கிட்டத்தட்ட வேறு எதுவுமே தருவதில்லை என்று கூறலாம். சிறிது நேரம் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து நாம் சிந்தனை செய்தால், இதற்கென்று மற்ற எல்லாவற்றையும் சிறிது நேரம் ஒதுக்கிவிட்டு, மனதை செலுத்தினால், விரைவிலேயே நமக்குப் புரிந்து விடும் இது எவ்வ

புதிய கிருமி

புதிய கிருமி இங்கும் அங்கும் அலையாது அமைதியாக அகத்திலே இருந்த இடத்தில் இருந்தவாறே அவரவர் வேலை அழகாய்ச் செய்து, தேவைக்களவாய் வெளியே சென்று, தேங்கிய நேரம்  குடும்பத்துடன் சிரித்துப் பேசி சிநேகம் வளர்த்து, தன்னைத்தானே தானுணர்ந்து சிந்தையில் சின்ன மாற்றம் வந்து....... சில நாட்கள் விட்டதாலே சிலிர்த்து நிமிரும் பூமியிலே காற்றும் நீரும் முன்போல் தெளிய, மனிதனில்லா வாழ்விடத்தில் விடுதலை உணரும் விலங்கினங்கள் சுதந்திரமாய் திரிந்து மகிழ்ந்து பூமிதனில் பல்லுயிர் பெருகி பெரியவாழ்க்கை பயின்றுகொள்வோம் சிறிய மனிதர் நாமெல்லோரும், இன்று இந்தப் இப்பூவுலகில்! அனுவைப் போன்ற சிறிய உருவில் பாடம் நமக்கு புகட்ட வந்த கரோனா என்னும் வைரஸ் கிருமி! உன்னைக் கண்டு அஞ்சுவதா உருகி நன்றி சொல்லுவதா? என்ன நாங்கள் செய்ய வேண்டும் என்பதை நீதான் கூறிவிடேன்! ஒன்றுமே  செய்ய வேண்டாம், அருமை மனிதா  சொல்வதைக் கேள்! இன்று போலே என்றும் நீ ஒன்றுமே செய்ய வேண்டாம்...... வேண்டியதெல்லாம் இயற்கையது தானே வந்து செய்துவிடும்! ஊடக உலகில் ஒன்றாகி மனதளவில் வேறுபட்ட,      எல்லா நாட்டு மனிதர்களும் , ஒற்றுமையாய்

மனமே எல்லாம்

மனமே எல்லாம் ராவில் உறங்கும் நேரம் நெருங்க கால்கள் இரண்டும் நோவில் துவள, வீட்டு வேலை  முடியவில்லை பூட்டவில்லை மாடி அறை! எப்படிப் போவேன் மாடிக்கு இப்படிக்  காலில் நோவுடனே? அச்சம் மனதில் மேலோங்க அமர்ந்திருந்தேன் சில மணித்துளிகள்..... 'மனமே எல்லாம்' என்கிறாரே முயற்சிதான் செய்வோமே!' மனதில் எண்ணம்  மின்ன 'நோவும் இல்லை ஒன்றுமில்லை நன்றாய் நானே உள்ளேன் இங்கு' என்றேன் யானே எனக்குள்ளே...... எழுந்தேன், நின்றேன்! என்ன விந்தை! எங்கோ காணோம் வலியில் பாதி! ஓட்டம் போனேன் மாடிக்கு பூட்டி வந்தேன் கதவை இழுத்து, உறங்கப் போனேன் மனம் களித்து! 💪👍💁🤸🏋️🧗🦸🏃🧘🚵🚴 மனமே எல்லாம் எல்லாம் மனசில இருக்கு என்ற இந்த வார்த்தையை அடிக்கடி நான் கேட்டிருக்கிறேன், படித்துமிருக்கிறேன்... அதிகமாக என் அனுபவத்தில் கண்டதில்லை. பல வருடங்களுக்கு முன் நான் பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, உடன் வேலை பார்த்த மருத்துவர் விடுமுறையில் மலையேற்றம் சென்று வந்தார்... எப்படி இவ்வளவு உயரமான மலையில் திடீரென்று ஏறினீர்கள்? உங்களுக்கு சிரமமாக இல்லையா? என்று கேட்டேன் அதற்கு அவர்

விபத்தின் விளைவு

விபத்தின் விளைவு உக்ரெய்ன் நாட்டு செர்னோபில்லில் 86 இல் வெடித்தது அங்கே இருந்த அனுமின் நிலையம். ஆவியின் வெப்பம் அன்றே கொன்றது அருகிருந்த மனிதர் இருவரை, அதன்பின் மெல்லக் கொன்றது இன்னும் பலரை..... அதற்கு மேல் கதிர்வீச்சும் இருந்து வந்த காரணத்தால், இருபது மைல் சுற்றளவில் வாழ்ந்து வந்த மனிதரெல்லாம் விட்டுச்சென்றனர் வீடுகளை! வருடம் சென்றன முப்பத்திநான்கு, இருந்தும் மனிதர் திரும்பவில்லை கதிரின் பயங்கர விளைவை எண்ணி..... இடத்தை இன்று கண்டு வரலாம் என்று சென்றனர் சில மனிதர் பாதுகாப்புக் கவசம் அணிந்து.... அதிசயமான  காட்சி ஒன்று அங்கே விரிந்தது அவர்கள் முன்னே, என்றுமில்லா அளவில் செடியும் கொடியும் மரமும் அனைத்து காட்டு விலங்குகளும், அழிந்ததென்ற குதிரைகளும் செழித்து வளர்ந்து சிரித்தன! அவைகளின் உடம்பில் குறைகள் ஏதும் பார்க்கும் பார்வையில் புலப்படவில்லை! உடம்பினுள்ளே குறையுண்டா இன்னும் தெளிவாய் தெரியவில்லை! மனிதனில்லா இடத்தினிலே கதிர்வீச்சிருந்தும் கொழித்திடும் இயற்கை! மனிதன் எங்கே இருந்தாலும் முதலில் அழிவது இயற்கையோ? அனுமின் கதிரினும் கொடியதா மனிதன் என்ற இனமிங்கே?