நனிசைவம்

நனிசைவம் 🥥😃🥜 வாழ்வின் தர்மம் நனிசைவம் விடுதலை அளித்திடும் நனி சைவம்.... விலங்கு பறவை மீன் என்று வாழும் யாவையும் வாழியவே நமது உணவு தாவரமே! காலை எழுந்ததும் கடுங்காப்பி, காப்பியில் வெல்லம் போட்டுக்கலாம். காலைக்காப்பியில் கண்டிப்பாகப் பாலும் எனக்குத் தேவையென்று, பதறிக் கூறும் மனிதருக்கு, தயாராயிருக்கு தாவரப்பால்... காப்பி குடித்து நடைப்பயிற்சி, குளித்து முடித்து சிற்றுண்டி.. மல்லிப் பூவாய் இட்டிலி இருக்க மணக்கும் சாம்பார் அருகிலிருக்கு, வெள்ளை நிறத்தில் தேங்காய் சட்டினி, சிவந்த மிளகாய்ப்பொடி யருகில், பொடிமேல் எண்ணெய்- தேங்காய்எண்ணெய், கலந்துண்ணலாம் அனைத்தும் மனம்போல்... மதியம் சூடாய் சோறுண்டு மணக்கும் மொச்சைப் பருப்புண்டு, பருப்பின் நடுவில் நல்லெண்ணெய் செக்கில் ஆட்டிய நல்லெண்ணை, நயமாய் விட்டு நன்றாய்ப் பிசைந்து, கத்தரிக்காயும் முருங்கைக்காயும் போட்டு வைத்த புளிக்குழம்பு பக்கம் வைத்துத் தொட்டுக்கலாம், மணக்க மணக்க சாப்பிடலாம்..... பீர்க்கங்காயில் பொரியல் செய்து தேங்காய் துருவி அதன்மேல் தூவி, ரசத்தை ஊற்றிக் கலந்த சோற்றில்,...