Posts

Showing posts from July, 2020

சத்தம்

சத்தம் நாங்கள் முன்பு பெங்களூரில் குடியிருந்த பொழுது அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் இருந்தோம். அந்த நேரத்தில்தான் எங்கள் பாப்பாத்தி நாய்குட்டி எங்களிடம் வந்து சேர்ந்தாள். அவள் வந்தபிறகுதான் நாய்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் குணநலன்கள் பற்றி ஒரு அறிமுகம் ஆரம்பமானது. பொதுவாக அவளுக்கு நம்மிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்றால், தன் பாஷையில் அவள் சொல்வது, நமக்கு 'வள் வள், லொள் லொள்' என்று காதில் விழும். சும்மா இருக்கும் பொழுது தேவையில்லாமல் கத்த மாட்டாள்.... நம்மிடம் ஏதாவது கூற விரும்பினால்தான் கத்துவாள். உதாரணத்திற்கு ஒரு பந்து வீசினால் ஓடி அதை பிடிப்பாள், பிறகு நாம் அந்த பந்தை மீண்டும் வீசாமல் இருந்தால் நம்மைப் பார்த்துக் கத்துவாள். அதாவது 'பந்தை வீசு' என்று அர்த்தம் என்பதை  நாம் புரிந்து கொள்ள வேண்டும். உணவு வேண்டுமென்பதற்கு ஒரு வகை சத்தம், 'மணி பத்தாயிற்று இன்னும் படுக்காமல் என்ன செய்கிறீர்கள்' என்றுநம்மை மிரட்டுவதற்கு ஒருவகை சத்தம்,நாங்கள்  வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது நானும் உடன் வருகிறேன் என்று கெஞ்சுவதற்கு ஒரு வகை சத்தம் என்று பலவகை குரல்கள் இருந்தன பாப்

பழங்கதை

பழங்கதை🏌️ சிறுவயதில் நாங்கள் பள்ளி விடுமுறையின் போது, எப்பொழுதுமே அத்தையின் ஊருக்குத்தான் செல்வோம்.  அங்கு எங்கள் வயதையொத்த பெண்கள் நாங்கள் மொத்தம் ஐந்து பேர்  இருப்போம். நான் என் தங்கை மற்றும் என் 'கசின்ஸ்' மூவரும் சேர்ந்து கழித்த விடுமுறை எல்லாம் பசுமையான ஞாபகங்கள். வெளியூர் செல்வது அல்லது வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற புதுமைகள்  இருக்காது,  வீட்டில்தான் இருப்போம் ஒரு ஒன்றரை மாதம் போல். இருந்தாலும் அவை அருமையான விடுமுறைகள்.   காரணம் மாறுதலான கிராமத்துச் சூழலும், உடன் உரையாட, சண்டை போட, சேர்ந்துகொள்ள சமவயதுத்தோழிகளான 'கஸின்ஸும்'..... எங்களுக்குள் பல பிரிவினைகள் வரும், ஒவ்வொரு விடுமுறைக்கும் ஜோடிகள் மாறிவிடும், யார் யாருக்கு சாதகமாகப் பேசுவதென்பதில்....ஆனால் பெரும்பாலான சமயங்களில் ஐந்து பேரும் ஒற்றுமையாகத் தான் இருப்போம். வீட்டு வேலை செய்வதில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வோம். ஊர்க் கதைகளை பேசிக் கொண்டே வீட்டுக்கும் தோட்டத்துக்கும் தினமும் இரண்டு முறையாவது நடந்து சென்று வருவோம்....... குறிப்பாக கிணற்று மேட்டுக்கு சென்று  துணிகளைத் துவைத்து அலசி வர இரண்டு நாட்களுக்கு ஒரு

வாழ்வும் வளமும்

வாழ்வும்           வளமும் மனிதன் என்ற உருவினிலே மண்ணில் வந்து பிறந்தாலே, வளம் பெற வேண்டும் வாழ்வில்,  பொருள் வளம் பெற  வேண்டும்  வாழ்வில், என்னும் எண்ணம் எப்பொழுதும்  ஏந்திய வாறு இருக்கின்றோம்! தவறும் அதிலே ஏதுமில்லை, வசதியான வாழ்க்கையிங்கு வாழ நினைப்பது தவறில்லை! அதற்குத்தேவை பணமும் பொருளும்! பிறக்கும் குழந்தை பிறந்தது முதல்  பணத்தை மட்டும் மனதில் கொண்டு  தொழிலை செய்யடா மகனே நீயும், வளத்தை மட்டும் வாழ்வென கொண்டு வளர்ந்திடு கண்ணே மகளே நீயும்! என்ற குறிக்கோளில்லாமல், செய்யும் தொழிலை செப்புடன் செய், நாணயத்துடனே நலமாய் செய், என்ற எண்ணம் மனதில் வளர்த்தால்...  செய்யும் தொழில் எதுவென்றாலும்,  என்றும் நன்றாய் அதுவும் விளங்கும்... வளமும் நலமும் தானே வந்து,  போகிற போக்கில் இயல்பாயிங்கு, வேண்டிய அளவு சேர்ந்துவிடும! அத்துடன் நிம்மதி நிலையாய் சேரும்! தவறுகள் எல்லாம் தானே, திருத்தம் கொண்டு தெளியக்கூடும், பேராசைத் தவறுகள் எல்லாம் தானே, திருத்தம் கொண்டு தெளியக்கூடும்! செய்யும் தொழிலும், சேரும் பணமும் அதுவே என்றாலும், மனதில் வைத்த குறியென்பது தொழிலா? பணமா?   என்பதில் தெளிவு இருத்தல் தேவை! படிப்பும் பர

கேள்வி கேட்கலாமா?

கேள்வி     கேட்கலாமா? வழக்கம் என்று வந்த பழக்கங்கள் பலவற்றை,  ஏனென்று கேள்வி, கேட்பதில் தவறில்லை. கேள்விகள் கேட்காமல் இருப்பதும் இயல்பில்லை, கேட்காத கேள்விக்கு பதிலென்பது  என்றுமில்லை! கேட்கும் கேள்விக்கு கிடைக்கலாம் பதிலன்றே, கிடைக்காமலும் போகலாம் பதிலென்ற பேருண்மை! நீண்ட நாள் கழித்து  நம்முன் நிற்கலாம்  சட்டென்று பதில் வந்து  சிரித்தவாறு முகம் மலர்ந்து! மனதிலே முதலில்  மலரும் கேள்விகள், மலருமுன் முடங்கலாம்,  இன்றுவரை வந்துவிட்ட முடக்கிடும் பழக்கத்தால். முடக்காமல் கேள்வியை மலர விடு மனமே,  மலர்ந்தால் தான் வந்திடும் கேள்விகள் வெளியே! பிறந்த நாள் முதலாய் கேள்வி கேட்ட குழந்தாய்!   பதிலொன்று வந்தது- 'கேட்காதே கேள்வியிங்கு, வழக்கத்தை மாற்றாமல்  என்றும் போல் செய்யென்று!' கேள்வியை முடக்கிடும் பழக்கம் வந்தது,  உலகத்தின் இந்த வழக்கத்தால்தானே!? இளமையும் இனிமையும் இணைந்திட்ட அன்னையும் அன்பும் அறிவும் அடர்ந்திட்ட தந்தையும், கேட்கட்டும் குழந்தைகள் கேள்விகளை நம்மிடம்.... தெரியாத பதிலுக்கு- தெரியாதென்றிடலாம்  வீரமாகக் குழந்தையிடம், என்றான விவேகம் வளர்த்திடலாம் வீட்டினிலே, விரித்திடலாம் விசாலம

காபியும் தயிர்சோறும்

காபியும் தயிர்சோறும் என் அத்தை மகள் முத்தூரில் வசிக்கிறாள். பல வருடங்களுக்கு முன்பு நாங்கள் அடிக்கடி பார்த்துக் கொண்ட சமயங்களில், அவள் வீட்டுத் தயிர் என்றால் எனக்கு மிகவும் விருப்பம். கரண்டியால் எடுக்கமுடியாது, கத்தியால் வெட்டித்தான் உண்ண வேண்டும் என்று கூறுமளவிற்கு கெட்டியாக இருக்கும்! அப்பொழுதெல்லாம் அவர்கள் வீட்டில் முக்கால்வாசி எருமைப்பால் தயிர் தான். இன்று அவரவருக்கு பேரன் பேத்திகள் வந்தபிறகு, ஒருவரையருவர் பார்த்துக் கொள்வது குறைந்துவிட்டது, ஏதோ திருமண விழாக்களில் சந்தித்தால் உரையாடிக் கொள்வோம். பொதுவாக என் சுற்றுவட்டாரங்களில் என்னுடைய ஃபில்டர்காபி பிரசித்தம்.... நல்ல அடர்த்தியாக டிகாக்ஷனை  வடிகட்டி, கறந்த பாலை பொங்கக் காய்ச்சி, பொங்கி வரும்போது அதில் டிகாக்ஷனைக் கலந்து, தேவையான அளவு சர்க்கரை (எனக்கு கொஞ்சம் அதிகமாக) போட்டு சுடச்சுடக் குடித்தால் உலகத்தில் உள்ள பரம சுகங்களில் இதுவும் ஒன்று என்பது என் கருத்து மட்டுமல்ல..... இன்னொரு விஷயம் என்னவென்றால் காப்பி, டீ இரண்டும் எனக்கு கொதிக்க கொதிக்க இருக்க வேண்டும். தம்ளர், அல்லது பீங்கான் கப் எதுவாயிருந்தாலும், ஓரங்களில் எல்லாம் தெரிக்கா