Posts

Showing posts from June, 2020

இயல்பு மாறலாமா

இயல்பு மாறலாமா? இயற்கை கொடுத்த இயல்பினிலே,  சிரித்துப் பேசும் தன்மையிலே பேசா மடந்தை அமைதியிலே, முந்தித் தள்ளும் வேகத்திலே பிந்தி நிற்கும் பொறுமையிலே, ஒருவருக்கொருவர் மாறிடும் குணங்கள் நிறைந்த பேரிடர்(😜) மனிதர் என்ற மானிடர்! கூடப்பிறந்த குணத்தை மாற்றுவதென்பது எங்கனம்?  மாற்ற முயன்றால் வந்திடும் சுதந்திரம் இல்லா சூழலிலே, இயற்கை மாறிய பேச்சிலும் இயல்பில்லா நடத்தையிலும், சிறு இறுக்கம் பிறக்கும் மனதினிலே.... இறுகிய மனதில் இயைந்த இல்லம் இனிதாய் இருப்பது இயலாது! கையது ஒன்றே என்றாலும் விரல்கள் எல்லாம் வேறாகும் குட்டைவிரலை நீளமாக  நீளும் விரலை குட்டையாக மாற்றுவதென்பது எங்கனம்?  தாயும் சேயும் ஆனாலும்  கணவன் மனைவி என்றாலும்  தமையன் தம்பி  தமக்கை தங்கை யாராயிருந்தபோதிலும், உடன் பிறந்த குணம், அதை  மாற்றச் சொல்லா மனம்,  அதுவே வாழ்வில் சுகம்! குடும்பம் நான் பொதுவாக ஜாஸ்தி பேசும் இயல்பு உடையவள் அல்ல. சோசியல் டைப் என்று கூற முடியாது, பிரெண்ட்லி டைப் என்றும் கூறமுடியாது. கொஞ்சம் 'அன்சோசியல் மற்றும் அன் பிரெண்ட்லி' என்று சொல்லலாம். அடிக்கடி என் தாய் கூறுவார் இவள் யாரிடமும் பேச மாட்டாள் யாரைப் பா

வௌவால்

 வௌவால் பூச்சி புழுவைத் தினமும் தின்று  பயிரைக் காப்பது மட்டுமன்று, மகரந்தமும் கூடச் சேர்த்து மரமும் செடியும் வளர்க்கும் சிநேகன், உழவருக்கு உற்ற தோழன், கொசுவை உண்ணும் கரிய நண்பன், இயற்கை கொடுத்த இரவுப்பறவை, பாலூட்டியாம் அழகுப் பறவை    வவ்வால் என்ற சின்னப்பறவை! வவ்வால்பறவை கடித்துவிடும்,   வந்துசேரும் நோய்நொடிகள், அருகில்கூட செல்லாதே அப்புறப்படுத்து அதன் வீட்டை, என்ற எண்ணம் குறுகியது, குதிரை கண்ணை அடைத்தது போல! ஓடும் விலங்கு பறக்கும் பறவை  ஊறும் பிராணி நீந்தும் மீன்கள் அனைத்தும் தேவை இவ்வுலகில்! அழித்துவிட்டால் நாமும் இல்லை! நாமே நம்மை உணர்வதென்றோ  நல்ல நாளும் அன்றே அன்றோ? வேண்டாமரமா?!  ----------------------- கடந்த 20 வருடங்களாக எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அல்லது சில நேரம் நானே வாய்ப்பை உண்டாக்கிக் கொண்டு மரக்கன்றுகளை வாங்கி, கிடைத்த இடத்தில் எல்லாம் நட்டு, முடிந்தவரை அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்கவும் செய்கிறேன். அவை அனைத்துமே நன்றாய் வளர்ந்ததாகக் கூற முடியாது. சிலது வந்தன, சிலது வந்து அழிந்துவிட்டன, சிலது வராமலே அழிந்துவிட்டன. பல வருடங்களுக்கு முன்பு என் இளைய மகன் பிளஸ்

குளவி

குளவி கடிக்கும் குளவி  அறிவோம் நாம் காக்கும் குளவி அறிவோமா! இலையும் பயிரும் உணவாக இருக்கும் புழுவும் பூச்சியும், தானே உணவாயாகிவிடும் குளவியின் சின்னக் குஞ்சுக்கு! புழுவை கூட்டில் அடைத்து அதனுள்ளே முட்டை வைத்து கூட்டை இழுத்து மூடிவிடும் குளவிக்குஞ்சின்  தாய்க்குளவி! பொரித்து வரும் குளவிக் குஞ்சு வளரும் தானே புழுவைத் தின்று! நாம் குளவியைக் கண்ணால் கண்டதும் எதிரி என்றொரு எண்ணம்  மனதில் ஒருகணம் மின்னும்!  உண்மை அதிலே உளதாவென்று உணர்ந்து சிந்தனை செய்யலாம், பேச்சு வழக்கில் வருவதெல்லாம்  பொய்யா, மெய்யா அறியலாம்!   பறந்து வரும் குளவி சிறுவயது முதல் வீட்டில், மற்றும் விடுமுறைக்குச் செல்லும் கிராமங்களில், பெரியவர்கள் அனைவரும் குழந்தைகளிடம் 'சிர்ர்ர்' என்ற என்று மெல்லிய ஓசையுடன் பறந்து சுற்றும் குளவியைப் பார்த்தால் உடனே  'குளவி! ஜாக்கிரதை,  கடித்துவிடும் தூரப்போ!' என்று கூறுவதை பலமுறை கேட்டிருக்கிறேன். ஆகையால் குளவி என்றாலே சிறியதொரு அச்சமும்,அது நம்  எதிரி, என்ற ஒரு எண்ணமும் என் மனதில் லேசாக  இருந்தது..... பலரின் மனதில் அப்படி இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். ஆனால் சமீபகாலமாக ய

சின்னஞ்சிறு சமூகம்

சின்னஞ்சிறு சமூகம் குளித்து முடித்து அறையைக் கழுவ, கண்ணில் பட்டது சுவற்றுள் நகரம், நகரின் வாயில் சுவரின் ஓட்டை, வாயில் வழியே  வெளியே வந்தது, சின்னஞ்சிறிய  எறும்பு கூட்டம்.. தரையில் கிடந்தது பூச்சியின் உடலது  எடுத்துச் சென்றது  எறும்புக் கூட்டம்! வாயில் சிறியது பூச்சி பெரியது ! பாவம் எறும்பெனப் பரிதாபப்பட்டேன். ஆனால் எறும்புகள்  அசரவில்லை, பூச்சியைப் பார்த்து  பதறவில்லை, சுற்றி வளைத்தன  பூச்சியினுடலை, திருப்பி விட்டன  'ட' வடிவில், தள்ளியும் இழுத்தும் தாங்கியும் தூக்கியும், கொண்டு சென்றன பூச்சியினுடலை. செய்யும்  செயல் செப்புடன்  முடிந்தது, எறும்புக் கூட்டம் கலைந்து, நகருள் சென்று மறைந்தது. சிந்தனை ஓட்டம் என்னுள்ளே.... பூச்சியினுடலை பார்த்ததும் அதிரவுமில்லை அஞ்சவுமில்லை,  அடுத்த காரியம் என்னென்று அக்கணமே இறங்கிய எறும்புகள்! நூற்றுக்கணக்கில் எறும்பிருந்தும், நூலிழை கூட குழப்பமில்லை, வந்து போன சுவடில்லாமல்  வந்த வேலை முடித்த கூட்டம்! சுவற்றில் நீரை அடித்திருந்தால் சிதைந்திருக்குமே அந்தக்கூட்டம்? ஆரம்பமானது என் பழக்கம் சுவரில் தரையில் எறும்புகள் இருந்தால், குளிப்பதெல்லாம்   எறும்புகள

ஆசையும் அகிலமும்

ஆசையும் அகிலமும் அளப்பரிய ஆசை ஆகாய விருப்பம், திரைகடலோடியும் திரவியம் தேடு என்றொரு லட்சியம்  எல்லார் மனதிலும்! தேடி வந்த திரவியம் செய்வதென்ன பார்க்கலாம்! இன்னும் பெரிய வீடு கட்டும் இரண்டிரண்டு கார் வாங்கும், சொந்த ஊரில்  இல்லமென்றும், எந்த ஊர் சென்றாலும்  தங்க சொந்த வீடென்னும்...... கழுத்தொடியும் காசுமாலை கைகொள்ளா வளையலும், காலில் தங்கக் கொலுசும் ஆடி வரும் வேளையில், வைரத்தில் வேலை செய்து ஓடி வரும் ஒட்டியானம்! பட்டுப்பூச்சி வாழ்க்கையை பட்டுப் போகச் செய்துவிட்டு  நெய்து வந்த புடவையைக்  ஒரு வருடம் கட்டி விட்டு, மறுவருடம் பழையதிது புதியதாக வேண்டுமென்னும் அளவில்லா ஆசைகளை நிறைவேற்றும் திரவியம்! இன்று வந்த கணினி நாளை பழையதாகிவிடும், இன்று புதிய கைபேசி கண்டிப்பாய் மாறி விடும்  நாளை மறுநாளிலே! அடுத்த வீதி ஸ்கூட்டரில் கடைவீதிக்கு சின்னக்கார் பக்கத்தூருப் பெரிய கார் தூரச்செல்ல கப்பல் கார்! தன் பிள்ளை திருமணத்தில் தலை வாழை இலை போட்டு பத்தாயிரம் மனிதர் வந்து பாதி உணவு உண்டு விட்டு மீதி உணவு வீச வேண்டும்! சிலநேரம் அந்த மணம் நிலைக்காமல் போனாலோ, மறுமணத்தில் ஆயிரம்பேர் வந்து வாழ்த்து சொல்ல வேண்டும், உண