Posts

Showing posts from August, 2020

புகைபோக்கி

Image
 புகைப்போக்கி             சமையற்கட்டில் வேலை செய்தால்         சுற்றிச்சூழும் புகை நிறைய..           அடைத்துவைத்த கூரை வழியே           எப்படிச் செல்லும்  கரும்புகை வெளியே?                 அந்தக் கால வீட்டில்      இருந்தது         அருமையான       புகை போக்கி!            அடுப்பை எரித்தால் எரியும்           புகையும்  தாளிதம் செய்தால்      கிளம்பும்           புகைச்சலும் வெளியே செல்லத் தடம் தேவை!          காற்றும் ஒளியும் வீட்டின் உள்ளே           வந்துபோகத் தடம் தேவை!          பாதை மட்டும் விட்டால் போதும்,           உள்ளும் வெளியும் செல்லும் வேலை          காற்றும் ஒளியும் பார்த்துக் கொள்ளும்!          முழுதும் அடைத்து வீட்டைக் கட்டி          மின்சார விசிறி மாட்டி விட்டு,         இல்லையென்றால் புதிய சிம்னி!           இரண்டும் தானே எதுவும் செய்யா               மின்சாரம் இருந்தால் மட்டும் ஓடும்,             மட்டிலா சத்தம் நிறைய போடும்!            சமையற்கட்டில் உள்ளே படிய          புகையைப் பாதி தங்கச் செய்யும்!           வேலியில் ஓடும் ஓணான் தன்னை             வேண்டும் என்று கட்டிக்கொண்டு,      

நின்னு போன நெஞ்சு

 நின்னுபோன நெஞ்சு சில நாட்களுக்கு முன் என்னைப் போன்ற ஒரு பெண்மணி கூறிய விஷயங்கள்: ஏனுங்கோவ்.. எனக்கு ஒரு சந்தேகமுங்க... இந்தக் கம்ப்யூட்டர் வந்ததனாலே,  காயதம் யூஸ் பண்றதல்லாங் கொறைஞ்சு போச்சுன்னு சனம் பேசுதுங்க? ஆனாலுங்க எனக்கென்னமோ, இப்ப எச்சாத்தே யூஸ் பண்ணறாப்பல இருக்குதுங்க. அன்னிக்கொருநாளு பேங்கில போய்யுங்க, ஆடிட்டரு கேட்டாருன்னு ஸ்டேட்டுமென்டு வாங்கீட்டு வல்லாமுன்னு போனமுங்க! அங்க அவிய அதைய எடுத்துக் குடுத்ததப் பாத்து ஒரு நிமிசொ என்ற நெஞ்சு நின்னுறுச்சுங்க! . ஒரு கொயரு பேப்பரு....அதுமு நல்ல அகலமுங்க....கத்த கத்தயா மிசினிலிருந்து உளுகுது! அட ஆமாங்கனே கத்த கத்தயாத்தே......  என்ற ஒரு ஆளுக்கு...... அதும்மு பேங்கில கணக்கு வளக்கெல்லாம் பெருசா எதுமில்லாத ஆளுக்கு குடுக்கிற பேப்பரூ.......அதுக்கு எத்தனை மரம்போச்சுன்னு தெரிலீங்க! ஏனுங்க.....! இந்த பாங்கில அச்சடிக்கிற மிசினோட ஸாப்ட்டுவேரே மாத்தி....ஒரு ரண்டு பேப்பர்ல குடுக்கறாப்பல பண்ண முடியாதுங்களா? அதென்ன அவ்வளவு கஸ்டமா? 'சுற்றுப்புறச்சூளலு சுற்றுப்புறச்சூளலு'ன்னு  ஊரெல்லாஞ்சனம் பேசுது.... பாங்கி இன்சார்ச்சோட காதுல உளுகிலயாட்ட இருக்

கலாச்சாரமிது...

கலாச்சாரமிது... பல வருடங்களுக்கு முன்பு  நான் விடாமல் வாரப் பத்திரிக்கைகள் நிறைய படித்துக் கொண்டிருந்த காலத்தில்....எந்தப் பத்திரிக்கை என்று ஞாபகம் இல்லை, ஏதோ ஒன்றில் ஒருவர்  அமெரிக்கா  போன்ற மேலை நாடுகளுக்குச் சென்று பார்த்தபோது அங்கு வசிக்கும் தமிழர்கள் நமது  பண்பாட்டையும் கலாச்சாரத்தையும், விடாமல் பாதுகாக்கின்றனர், எல்லா தமிழ் பண்டிகைகளையும் கொண்டாடுகின்றனர், பட்டுப்பாவாடை அணிகிறார்கள் குழந்தைகள், தாவணி கட்டுகிறார்கள், பரத நாட்டியம் ஆடுகிறார்கள், போன்ற பல விஷயங்களை, அவையெல்லாம் இங்கில்லையே என்ற ஒரு ஏக்கத்துடனும், மேலை நாடுகளில் இருக்கின்றன என்றதொரு மகிழ்வுடனும் எழுதியிருந்தார் .... எழுதியவர் பெயரும் ஞாபகம் இல்லை! இந்தச் செய்தி நன்றாக இருப்பது போல்தான் தோன்றியது. பிறகு கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், இதில் திருப்திப்பட பெரிதாக எதுவும் இல்லை என்று பட்டது. ஏனென்றால் கலாச்சாரம் என்பது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருக்கும் பழக்கவழக்கங்கள். சில நாட்கள் கழித்து மெதுவாக மாறி, மருவி, திரிந்து அவை அந்த இடத்திலேயே வேறு பழக்கங்களாக மாறும்.... இன்னும் சில நாட்களு